Friday, July 31, 2009

வலி


வலியின் உக்கிரத்திற்கேற்ப
குழந்தை முடிந்தமட்டும் உரக்க அழுகிறது
நம் வயசிற்கு
நாம் அப்படி அழமுடியாது

தீராத வலியை
குழந்தை அழுதே தீர்க்கப்பார்க்கிறது

நாம் தான்
அழும்பாக்கியத்தை இழந்து விட்டோம்

வலி கண்ணீராய் கரைய கரைய
குழந்தை அழுதழுது ஓய்கிறது

இன்னும் சிறிது நேரத்தில்
சிரித்து விளையாடத் துவங்கிவிடும்

நம்மால் தான் எதுவும் முடியவில்லை

வலித்தபடியே வலியிருக்க.........

-ஜி.எஸ் தயாளன்