Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, December 28, 2009

ஞானும் எண்ட .................ஹீரோ .பிரபாகரனும்

ஒந்நு இல்லேட்டாஎண்ட நண்பன் பிரபாகரனைப் எனிக்கு ரொம்ம பிடிக்குன்னு..ஆயால்  ஒரு பிடிக்கிட்டாப் புள்ளி..கொறச்ச காலத்தில் ஆயாளோட வல்லியம் சினேகம் உண்டாயிட்டு.


தேனுங்ணா,.. தென்னடா,..இவன் திடீர்னு இப்படி ஆயிட்டான்னு பாக்கிறீங்களா? அது ஒன்னுமில்லைங்கணா,   இந்த தலைப்ப படிச்சிபோட்டு,  ஏதாவது  ஒரு நாதாரி , இவனுக்கும்  ???அவருக்கும் ஏதோ தொடர்பிருக்குன்னு சொல்லும், அவ்வளவு தான்,  நம்மூரு ஸ்காட்லாந்து (யா)வார்டு, வந்து, நம்மள அள்ளிகிட்டுப் போய், ஏதோ காஷ்மீர் தீவிரவாதிய புடிச்சிட்டதா,  பேட்டி குடுப்பாங்கதேவையாங்ணா இதெல்லாம்! நான் புள்ளகுட்டிக் காரனுங்ணா.

அதுமாத்தரம் இல்லீங்ணா, எங்க தலைவர் அதாங்ணா.நம்ம வானம்பாடிகள் வேற..இந்த மாதர எழுதி, என்னோட ‘எக்கோ’ அதாங்ணா, நம்ம வாத்தியார் சொல்லிதாந்தாரல்லோ ‘கிருதா’(ego) அத கிளப்பியூட்டுட்டாருங்ணா.


அதுமட்டுமில்லாம, நம்ம சேரநன் நாட்டை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமுங்ளா, என்னா வளம,,,என்னா பசுமை,.ம்ஹும்,,,என்னத்தச் சொல்ல……அது ஒரு காலமுங்ணா…….


பழைய நெனப்புடா..பேராண்டி……ன்னு எங்கனயோ பாடறது உங்குளுக்கும் கேக்குதுங்களாங்ணா


அத்தோட போச்சுங்களா,அந்தூருக்காரங்கதான் எலக்கியந் தெரிஞ்சவிங்கன்னு வேற நம்மூரு  பெரிய பெரிய எழுத்தாணிகள்லாம் சொல்லிகிட்டிருக்காங்கஅதான் இந்த புது மொயற்சின்னு வச்சுக்கங்களேன்.


சரி விசியத்துக்கு வருவோம்,



பிரபாகரன்:-

நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில, அப்ப நமக்கு வயசு,15 இருக்குமுங்க.    எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு பிரபாகரன் இருந்தாருங்க.  அவருக்கும் நம்ம  வயசுதான் இருக்குமுங்க. கிருத்துவ குடும்பத்தைச் சார்ந்த அவர் ஒவ்வொரு ஞாயித்துக் கெழமையும்  காலைல 7 மணிக்கு, வெள்ளைச் சட்டை, வெள்ளைப் பேண்ட், கையில் வேத பொஸ்தகத்தோட , சர்ச்க்கு எங்கள் தெரு வழியாக நடந்து போவாருங்க.  அவரு  அம்மாவும் தங்கச்சியும் கூடபோவாங்க.

அளவா, தச்ச வெள்ளைப் பேண்ட், முழுக்கை வெள்ளைச் சட்டை, கருப்பு பூட்டு, கருப்பு பெல்ட், எண்ணை தொட்டு படிய வாரின தலை, நேரான பார்வை, இதெல்லாம் நம்மள ரொம்ப டிஸ்டப் பண்டிபோடுச்சுங்ணா.

நாம எப்பவும் போல லுங்கிய கட்டிகிட்டு, ரோட்ல போற வாரவுங்கள கலாய்ச்சிகிட்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் பொடிசுங்கள கூட்டி வச்சு அலப்பற பண்ணிகிட்டிருப்பம்.  போற வாரவங்கள்ளாம், நம்ம ஒரு நிமிசம் நின்னு, நம்மள ஒரு மாதர பாத்து மனசுக்குள்ள திட்டி போட்டு போனாத்தானுங்க நமக்கு காலைச் சோறு இறங்கும்.


ரோட்ல போற எல்லாரும் நம்ம நல்ல முறையில (இப்புடிவெற நெனப்பா?) கவுனிச்சிட்டு போகும் போது, அவரு மட்டும், நாம ரோட்டில இருக்கிறோங்க நினைப்பே இல்லாத மாதர போவாருங்க.  ஒரு நா கூட அவரு நம்மள நிமுந்து கண்ணால பாத்ததில்லீங்கணா.  ஒரு கைல பொஸ்தகம், ஒரு கைல தங்கச்சி கையப் புடிச்சிகிட்டு, இந்தல்ல அந்தல்ல பாக்காம, ஒரே நேர் கோட்ல, நடந்து போவாரு,  அப்பறம் 10 மணிக்கு திரும்பி வாருவாரு.


என்றா இது,,,,,ஒரு பெரிய மனுச, (நாந்தான்நாந்தான்.)ரோட்டில நிக்கறம், கொஞ்சங்கூட சட்டபண்டாம போறானேன்னு வெசனமாச்சுங்ணா.  இத இப்டியே வுடக் கூடாதுன்னு ஒரு நா, அவரு வரும் போது  சைக்கிள எடுத்துகிட்டுப் போய், அவுருக்கு நேர,  அவரு பேண்ட்ல முட்டறா மாதர போயி நிறுத்தி, அப்புடியே அவுரு மூஞ்சியப் பார்த்தனுங்ணா.   ஒரு மாத்தமும் இல்லைங்ணா,  நிமுந்து பார்த்தாரு, லேசா விலகி, அவுருபாட்டுக்கும் நடக்க ஆரம்பிச்சிட்டாருங்ணா.

மொகத்துல ஒரு பதட்டமில்ல, பயமில்ல,  அப்புடியோரு ஆள நான் பாத்ததே இல்லீங்க.  அளவுக்கு மீறின முதிர்ச்சி………

ரசினிகாந்த் சினிமா பார்த்தாலே, ஒரு வாரத்துக்கு தலைய கலைச்சி வுட்டுகிட்டு, சட்டைல மேல ரெண்டு பட்டனை கழட்டிவுட்டுகிட்டு கீழ் ரெண்டு பட்டன கழட்டி வுட்டு அதுல ஒரு முடிச்சு போட்டுகிட்டு திரியறவங்க நாம……



ஆனாப் பாருங்க, அதுக்கு பொறகு, அவுரு நமக்கு ஹீரோ ஆயிட்டாருங்ணா.  அவுரு மாதர பேண்ட் போடறது, ஷூ போடறது, யாராவது ஏதாவது கேட்டா, நிதானமா திரும்பி, தலைய மட்டும் லேசா ஆட்டி என்னான்னு கேக்கறது. அப்புடி, இப்புடின்னு ரொம்ப..


முடியலைன்னாலும் தம் கட்டிகிட்டு, பயப்படாத மாதர நடிச்சு ,  ஒரு தோசைய முக்காமணி நேரம் மெதுவா பிச்சி சாப்புட்டு,  யாருகிட்டயும் எதுவும் பேசாம, அளவா சிரிச்சு, ஒடம்பு, மனசு அத்தனையிலும் நிதானத்த கொண்டு வந்து, அப்புடியே மொத்தமா மாறின நாளாவது நாள்.


ராத்திரி ஒரு மணி இருக்கும், வூட்ல யாரோ பெல் அடிச்சாங்க. என்னடான்னு போயி பார்த்தா,  எதிர்த்த வூட்டுக்காரரு, சிவில் எஞ்சினியரு, ஆளு பார்த்தா மிலிட்டரிக்காராட்டமிருப்பாரு. நம்மோட குருவுல அவுரும் ஒருத்தரு. பெரிய மூளைக்காரரு. 


எவனோ ஒரு திருடன் ஓடறான், வாப்பா போயி புடிப்போன்னாரு, உடனே எந்திருச்சு லுங்கிய மடிச்சி கட்டிகிட்டு, கைல நம்ம சைஸுக்கு ஒரு தப்பக் குச்சிய தூக்கிகிட்டு, சந்து பொந்தெல்லாம் தேடுனா, ஒரு குறுக்கு சந்தில லைட் கம்பத்துகிட்ட யாரோ உக்காந்திருந்த  மாதர இருந்தது. 


மெதுவா கிட்டப் போய் எட்டி தல மசற புடிச்சு, தப்ப குச்சில பட்டையா அடிக்க,  அவன் அய்யோ, அம்மா, கத்த, மொத்த சனமும் ரோட்டுக்கு வந்திருச்சுங்க.


அப்பறம் அவனை புடிச்சு பெருசுங்கெல்லாம் விசாரிச்சா, அவன் எதோ நாயி தொரத்துச்சுன்னு ஓடி இருக்கான், இவரு திருடன்னு நினைச்சு என்னை எழுப்ப………பாவம் ஒரு அப்பாவிய போட்டு அடிச்சு, அவன் வாயி மூக்கெல்லாம் ரத்தம்……



எல்லாம் முடிஞ்சு பார்த்தா, வெவகாரம் நடந்த எடம் நம்ம ஹீரோ வூட்டு வாசலு. அட இப்பவாவது மனுச நம்மள நிமிந்து பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாரான்னு பார்த்தா..ம்ஹூம்.  அதே பார்வை, அதே நிதானம்.


ஆனாப் பாருங்க……அவுரு தங்கச்சி சொன்னனில்ல அது மட்டும்
லேசா தலைய சாச்சு, ஒரு சிரிப்பு..அப்பத்தான் புரிஞ்சுதுங்க அட நாம ஹீரோ வாயிட்டம்னு…….


அதுக்கப்பறம், ஞாயித்துகிழமையானா, ரோடெல்லாம் ஒரே அலப்பறை தான்.  என் ஹீரோ என்ன பார்க்கிறாரோ இல்லையோ, என் ஹீரோயின் என்னப் ஓரக்கண்ணால் பார்த்து விட்டு  ஒரு சிரிப்பாங்க……..நானும் ஹீரோ ஆயிட்டேன்……….

Tuesday, November 10, 2009

யாராச்சும் சொல்லுங்களேன்..........ப்ளீஸ்

இன்று அதிகாலையில் விழித்து விட்டேன். வீட்டின் முன் அறையில் இருக்கும் கணிணியை உயிர்ப்பித்து படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதை அறியவில்லை.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது………..

என் இரண்டாவது வாண்டு உள்ளே நுழைந்தான்……….

நான்: என்னடா……..பண்ணையக்காரி சத்தம் கேக்குது….என்ன குறும்பு செஞ்ச……………?

அவன்: ஹூம்……….உங்களத்தான் திட்டிகிட்டிருக்கறாங்க……… ஏம்பா? எத்தன தடவ சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? குட்பாயா நடந்துக்க….மாட்டீங்கறீங்க…………..
இருங்க…இருங்க…..உங்கம்மாகிட்டயே சொல்லறன்………….

நான் : ஏய்….உத வாங்கப் போற…….

அவன்: ம்ம்ம்ம்…..ஏங்கிட்டத்தான் உங்க வீரமெல்லாம்……(இது எப்படி இவனுக்குத் தெரியும்) போங்க……. போங்க..…. மேடம் கூப்படறாங்க…

சமயலறைக்குள் நுழையும் போதே அர்ச்சனை காதில் கேட்கத் தொடங்கியது.

ஒரு பொறுப்பும் இல்ல….இங்க நான் ஒருத்தி காலைல இருந்து தனியா அல்லாடறன்……வேலைக்காரி லீவு………..கூடமாட ஒத்தாச பண்ணாம காலங்கார்த்தால கம்ப்யூட்டர் முன்னால போய் உக்காந்திட்டா…….. என்னதான் செய்யறது……….. ?

இல்லம்மா…….வந்திட்டன்ல…..என்ன செய்யனும்……. .சொல்லு என்று சொல்லி முடிக்குமுன்……

இந்த கத்திரிக்காயை சின்ன சின்னதா வெட்டிக்கொடுங்க…….

நான் சரி என்று ஒரு பாத்திரத்தை கையிலெடுக்க……

பெரிய பாத்திரத்தை எடுத்து காயை நல்லா கழுவீட்டு வெட்டுங்க……

தண்ணீர் பிடித்து, “அஞ்சலி கட்டரை எடுத்து டேபிளின் மேல் வைத்து வெட்டத் தொடங்குமுன்…..

ரொம்ப பெரிசு பெருசா வெட்டாதீங்க……. பொடியா வெட்டுங்க

சரி..........

காம்பை வெட்டிட்டு அப்பறம் வெட்டுங்க……

சரி என்று காம்புகளை வெட்டிவிட்டு காய்களை கழுவிக் கொண்டிருந்த போது……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க ……?, எல்லாவற்றையும் தன் பக்கம் எடுத்து வைத்து அவளே வெட்டத் தொடங்கியவள்……

மச மசன்னு நின்னுகிட்டிருக்காதீங்க……. பசங்களுக்கு லஞ்ச்க்கு கொஞ்சம் சப்பாத்தி தேச்சுக் குடுங்க…

சரி என்று , நானும் பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவைக், கையில் எடுத்தவுடன்.

வரமாவு போட்டு தேயுங்க…..இல்லைன்னா தேய்க்க வராது

சரி என்று தலையாட்டிவிட்டு, மாவையும் அதைத் தேய்க்கும் பலகை, கட்டையை கையில் எடுத்து அதை துடைக்க ஒரு துணியையும் கையிலெடுத்த நேரத்தில்….

பலகைய தொடச்சிட்டு தேயுங்க…….குப்பையிருக்கும்................

சரி என்று சொல்லி, துடைத்துவிட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டத்தொடங்குய போது ……

சின்ன சின்னதா உருட்டுங்க……..அப்பறம் தேய்க்க முடியாது.

சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிறிதாக உருட்ட தொடங்கியவுடன்….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……தள்ளுங்க……..என்றபடி என்னிடமிருந்த அனைத்தையும் தான் வாங்கி அவளே சப்பாத்தி தேய்க்கத் தொடங்கியவள் என்னைப் பார்த்து,

அரிசி ஊற வைத்திருக்கிறேன். கலைஞ்சு, குக்கர்ல போட்டு, நாலு டம்ளர் தண்ணி ஊத்தி மூடி வையுங்க என்றாள்.

அரிசிப் பாத்திரத்தை எடுக்குமுன்

பெரிய பாத்திரத்தை எடுத்து, தண்ணி நிறைய ஊத்தி கழுவுங்க….

சரி என்று பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் பிடித்து அரிசியை அதில் கொட்டியவுடன்………

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……..போங்க போய் பசங்க ரெடியாயிட்டாங்களான்னு பாருங்க………

ஹாலில் தயாராக நின்று கொண்டிருந்த வாண்டுகள் என்னைப் பார்த்தவுடன் ஒருவொருக் கொருவர் பார்த்துக் கொண்டு கண் சிமிட்டி சிரித்தனர்.

என்னடா……..ரெடியா?…….இங்க நின்னு சிரிச்சிகிட்டிருக்கிறீங்க…….

ஒண்ணுமில்லப்பா என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தனர்…….

ம்ம்ம்ம்….என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த போது பின்னிருந்து குரல்……….

என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……டிரைவர் லீவு இன்னைக்கு……நீங்க தான் கொண்டு போய் ஸ்கூலில் விட்டிட்டு வரனும். காரை எடுத்து வெளில வையுங்க………….

கார் சாவியை கையிலெடுத்துத் திரும்புகையில்,

பார்த்து…….. ரொம்ப ரோட்டு ஓரத்தில நிறுத்தி விடாதீங்க……..
அப்பறம் கதவ திறந்து ஏற முடியாது.

சரி என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு மெயின் கேட்டை இழுத்து சாத்தத் தொடங்கு முன்….

மீண்டும் என்ன பண்ணிகிட்டிருக்கிறீங்க……….

கதவ நல்லா சாத்திட்டு நீங்க ரெடியாகுங்க………நானே பசங்கள விட்டுட்டு அப்படியே “ஐ ப்ரோ’ ஷேப் பண்ணிட்டு வந்தர்ரேன்….. என்று சொல்லிக் கொண்டே பறந்தாள்.

எனக்குப் புரியவில்லை……என்னை உதவிக்கு கூப்பிட்டாள்….ஆனால் எல்லா வேலைகளையும் அவளே செய்தாள்……..பின் எதற்கு என்னைக் கூப்பிட்டாள்……..

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…..என்று முடிவு செய்து வீட்டிற்குள் சென்றபோது…….. சமையலறையில் ஏதோ சத்தம்……எட்டிப் பார்த்த போது………….

சமையல் மேடைக்கு மேலிருந்த சாமி படத்திற்கு விளக்கேற்றி, பூ வைத்து ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அம்மா, அப்பாவிடம்…

குடிக்க சுடுதண்ணீர் கெட்டிலில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலை தொடர்ந்தாள்.

அப்பா கெட்டிலில் தண்ணீர் ஊற்றத் தொடங்கியதும்,

என் செய்யறீங்க……..முக்கால் வாசி தண்ணி ஊத்துங்க போதும்….. என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ முணுமுணுக்கத் தொடங்கினாள்

அப்பா சரி என்று சொல்லிவிட்டு தண்ணீர் பிடித்து ஊற்றத்தொடங்குமுன்………..

மூடியை நல்லா மூடி ஸ்விட்ச் போடுங்க……

அப்பா சரி என்று தலையாட்டி விட்டு மூடியை மூடத்தொடங்குமுன்…

என்ன செய்யறீங்க……தள்ளுங்க……. சுடு தண்ணி வைக்கத் தெரியல….. இதுல ஊர் ஊராப் போயி ராமாயணம் வேற….. என்றவாறு அவளே மூடியை மூடி ஸ்விட்சையும் ஆன் செய்தாள்…..

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அப்பா ஏனோ சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு எதையோ அவர் சொல்ல முயல்வதை காட்டியது.

எனக்கு ஒன்று புரிந்தது. இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட, சரி என்று ஏற்றுக் கொள்வதே சரி. என்று சொல்ல வந்திருப்பாரோ?

ஏன்? எதற்காக? இவள் இப்படி நடந்துகொள்கிறாள்? இவளுக்கு என்ன ஆயிற்று? வரட்டும் கேட்டு விட வேண்டியதுதான்…. என்ற முந்தைய நினைப்பை மறக்கத் தொடங்கினேன்.

ஏன்? ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி என்று இவளைக் கேட்பதைவிட…..உங்களிடம் கேட்பதென்று முடிவு செய்து, இந்த பதிவை இட்டிருக்கின்றேன்……யாராச்சும்  சொல்லுங்களேன்……ப்ளீஸ்

Wednesday, September 23, 2009

பாயாசம், அப்பளம், வடை….


 மதியம் 2 மணி,  

அலுவலகத்திலிருந்து திரும்பி, மதிய உணவை ஒரு கை பார்த்து,  (பொதுவாகவே சாப்பிட, சாப்பிட தூங்க ஆரம்பிப்பவன்)  உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு ல்ல…….. 

வீட்டிலிருக்கும்  இரண்டு வாண்டுகளிடமிருந்து எப்படி தப்பிப்பதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது  தம்பியிடமிருந்து போன். அவன் வீட்டிற்கு வரச் சொல்லி

. சரி விதியார விட்டதுன்னு கிளம்பி போகும் போது,திடீரென்று ஒரு ஞாபகம், அன்று காலை, நா.கணேசன் அய்யா “ஈரோட்டில் பாரதி” என்ற இடுகையை படித்தேன்.  அதில்  பாரதி கடைசியாக பேசிய கூட்டம் பற்றி எழுதியிருந்தார்.

சரி, தம்பி வீட்டுக்கு பக்கத்தில் தான் அவர் குறிப்பிட்டுருந்த அந்த வாசக சாலை இருந்தது.  குடும்பத்தை தம்பி வீட்டில் செட்டில் செய்து விட்டு , பாரதி கடைசியாக பேசிய அந்த வாசகர் சாலைக்கு சென்றேன்.

நான் பள்ளியில் படித்த நாட்களில் அது இடிந்து சிதிலமாகி, பாழடைந்து கிடந்த அந்த கட்டிடம் முன்னாள் ஆட்சியர் முனைவர். உதயசந்திரன் முயற்சியால் புதுப் பொழிவுடன் காணப்பட்டது.

வெளியில் ரோட்டிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்த போது, 

உள்ளிருந்து வந்த ஒரு பெண்மனி, என்னை அழைத்து எதற்காக படமெடுக்கிறீர்கள்? என்றார்.    

காலையிலிருந்து நடந்ததைச் சொன்னவுடன், அருகிலிருந்த ஒருவரை அழைத்து இவருக்கு சுற்றிக்காட்டுங்கள். என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.  

 உடன் வந்தவரும் எல்லா அறைகளையும் சுற்றிக்காட்டிவிட்டு படங்கள் எடுக்க உதவியும் செய்தது மகிழ்சியாக இருந்தது.

நான் அவரோடு பேசிக்கொண்டிருந்த போது இந்த புகைப்படங்களை பிளாக்கில் இடுப்போவதாக சொன்ன போது அருகிலிருந்த

ஒரு திருவாளர் பொதுஜனம் மெதுவாகக் கேட்டார்: ஏன் சார்  ஏம் போட்டாவும் வரும்ல........எந்த பேப்பர் சார் நீங்க...... கொஞ்சம் பார்த்து கலர்ல போடுங்க சார்......நானே கொஞ்சம் கருப்பு..........
                                 
                                 ----------------------------------




நேற்றுமாலை பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக என் இளைய மகன் ..வயது-5

அப்பு...பப்பு…………..அப்பு.பப்பு……….

(அன்பு அதிகமானால் அல்லது என்னால் ஏதும் ஆகவேண்டியிருந்தால் அவன் இப்படி அழைப்பது வழக்கம்.)


என்னப்பா?

ஒரு முக்கியமான விசயம…………….

ம்

அம்மாகிட்ட சொல்லக்கூடாது……….


சரி சொல்லு……


மெதுவா கிட்ட வந்து……….குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னப்பா?

இல்லப்பா…….அதுவந்து……..வந்து…………
(பத்தாங்கிளாஸ் பரிட்சையில கூட நான் அப்படி முழிச்சதில்ல…)…

இடையில் பெரியவன்(வயது:8) டேய்..இதெல்லாம் அப்பாகிட்ட  கேக்கக்கூடாதுன்னு சொன்னன்ல..)


சொல்லுங்க.......அப்பு....பப்பு................



இல்லப்பா……அதுவந்து………..ஊருல ஏற்கனேவே மனுசங்க அதிகமாக இருக்கிறாங்க, எல்லாத்துக்கும், குடி தண்ணீர், போக்குவரத்து, பள்ளிக்கூடம், இதயெல்லாம் குடுக்கமுடியாதுல்ல


அதனால…….

அதனால, அரசாங்கம்,   இனிமே குடும்பத்த கட்டுப்பாட்டோட வச்சுக்குங்க……..அதிகமா குழந்தைகளை பெத்துக்காதீங்கன்னு சொல்லுதுப்பா..

இதயேம்பா நம்மகிட்ட சொல்லுறாங்க……சாமிகிட்டயில்ல சொல்லோனும்……..

எது………….சாமிகிட்டயா?

ஆமாப்பா……அவருதான நம்மளயெல்லாம் படச்சாரு?

அய்யோ…….சாமி…….இத யாருகிட்ட போய் சொல்லுவேன்……..

கருமாந்தரம் புடிச்ச பயலுக, டீ.வி ல  இந்த  விளம்பரத்த  போட்டு என்ன கொலைகாரனாக்கப் போறாங்க……இவனுங்க இன்னும் என்னென்ன கேப்பானுங்களோ..

                                   ---------------------------------



நாமக்கல்லில் உறவினர் இல்லத் திருமணம்.   வீட்டில் அம்மா,மனைவி, குழந்தைகள் அனைவரும் முதல்நாளே சென்று விட்டிருந்தனர்.  காலையில் எழுந்து குளித்து, 7 மணியளவில் பேருந்தைப் பிடித்தேன்.  ஈரோட்டிலிருந்து நாமக்கல்,திருச்சி வழியாக தஞ்சை செல்லும் பஸ் அது. பஸ்ஸின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன.  ஓட்டுனருக்கு பின் இருக்கையில் ஒரு காலியிடமும், அதன் எதிர்புறம் ஒரு இரண்டும்  மட்டுமே காலியாக இருந்தது.

 காலியாக இருந்த இரண்டிடத்தில் அமரபோகும் போது வந்த, ஒரு இளவட்ட  தள்ளுநர்  என்னிடம்  :”சார், அதுல ஆள் வராங்க,  சீட் போட்டிருக்கு” என்றார். சரி என்று ஓட்டுனரின் பின் இருக்கையில் அமர்ந்தேன்.


பஸ் ஸ்டேண்டிலிருந்து  கிளம்பிய உடன், கண்டக்டர்  செல்லுக்கு ஒரு மிஸ்டு கால்.  அவரும் மீண்டும் அந்த மிஸ்டு கால கூப்பிட்டு, 


 வந்தாச்சாட?....
……………………..

பஸ் ஸ்டேண்டுல இருந்து கிளம்பிட்டோம்.. நம்ம வண்டிய பார்த்தா கை காட்டு,..என்ன……. டிரைவருக்கு தெரியாது.


ஒ . கே……வா. ன்னு சொல்லிட்டு ,


டிரைவர் கிட்ட போய்

எங்கயும் நிறுத்த வேண்டாம் நேராப் போயிடலாம்

டிரைவர்: பள்ளிபாளையத்தில டைமர் கிட்ட கையெழுத்து?

கண்டக்டர்:   வாங்கிக்கலாம்,.வாங்கிக்கலாம்………

டிரைவர்:அப்புறம்.

வழியில நம்மாளு   ஹவுசிங் போர்டுகிட்ட நின்னு கை காமிப்பாஅப்புடியே நிறுத்தி ஏத்திக்குங்க……
(அடங்கொய்யாலே……..அதுக்குத்தான் ரெண்டு சீட் ப்ளாக் பண்ணிருக்கானா.)



இதற்கிடையில் காவிரி ஆற்றின் பாலத்திற்கு அருகில் வரும் போது அவரின்  பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் கோளாரு ஏற்பட   தடுமாறிப்போனார். பள்ளிபாளையம் டிப்போ முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மெசின் மாற்றி வேறு ஒன்றை எடுத்துவந்தார்.  அதற்குள் 15 நிமிடம் காலி. பஸ்ஸிலிருந்த பயணிகள் கொதித்திழுந்து லேட்டாகி விட்டதென்று சத்தம் போட்டனர்.  இடையில் இவர் செல்போன் வேறு விடாது அடிக்கத் தொடங்கியது.


போனை எடுத்து……


வைடா…….வைடா.வந்தர்றேன்……ஒரு சின்ன பிரச்சனை……

…………….

வந்தர்ரேன்……வந்தர்ரேன்……..ஒரு சின்ன பிரச்சனைதான், சரியாயிடுச்சு……வந்தர்றேன்.


போனை கட் பண்ண,   மீண்டும் அடிக்கிறது..


போனை எடுத்து..


ஹாலோ..
………………..

ஒன்னுமில்ல..வந்து சொல்லறன்..

…………….

பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல……சின்ன பிரச்சனைதான்…………

…………………

அதற்குள் பயணிகள் அனைவரும் சத்தம் போட.போனை கட் செய்துவிட்டு.


டிரைவரிடம்.அண்ணே.கொஞ்சம் நிறுத்தாம ஓட்டுங்க…… லேட்டாயிருச்சு..


டிரைவர்: ஏன் உன் ஆளு வெயிட் பண்ணாதாம?.... வேற வண்டில போகச் சொல்லு.


இவர்: என்னண்ணே,,, கோச்சுக்கிறீங்க…….பாஸஞ்சர்ஸ் கத்தராங்கல்ல…….



டிக்கட் கொடுக்கத்தொடங்கிய அவரின் பாதிகவனம், டிக்கட் கொடுப்பதில், பாதிக்கவனம் வழியில் டிரைவர் வண்டியை நிறுத்தி தன் ஆளை ஏற்றாமல் விட்டுவிடுவாரோ? என்பதில்.


10ரூபாய் கொடுத்து 7ரூபாய் டிக்கெட் வாங்கியவருக்கு 43ரூபாய் மீதம் கொடுத்தார். 50ரூ கொடுத்து 7 ரூ டிக்கட் வாங்கியவருக்கு 3ரூ மீதி கொடுத்தார். எப்படித்தான் கணக்கு முடித்தாரோ..

5 கி.மீ பயணத்திற்குள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்திருந்தார்.



ஒரு சிறு சந்திப்பில்,  ஒரு இளம் பெண் இடுப்பில் ஒரு குழந்தையுடன், பஸ்ஸை நிறுத்துமாறு,  கையைக் காட்டினார்.  டிரைவர் வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்துப்போகும்போது……


கண்டக்டர்:
அண்ணாஅண்ணா…….அதில்லங்கண்ணா..போலாங்கண்ணா……நம்மாளு இன்னும் கொஞ்சம் கலரா இருப்பாண்ணா……இது கைல கொழந்த வேற…….இதில்லண்ணா

 (வண்டியின் முன்பகுதியிலிருந்த அனைவருக்கும் வரப்போகும் பெண்ணைப் பார்க்கும் ஆர்வம் கூடத் தொடங்கியது..)



டிரைவர்: 
டேய்……நாசமாப்போறவனே…….நீ வந்து வண்டியோட்றா……இழவு டிக்கட்ட, நான் குடுத்துக்கறன்………


 கண்டக்டர்:
 இல்லைங்கண்ணா…….கோவிச்சுக்காதீங்கண்ணா……சாரிங்கண்ணா…….



ஒருவழியா ஒரு பஸ் நிறுத்ததிலிருந்து ஒரு பெண் கை காட்ட……வண்டியை நிறுத்தி சிலரை ஏற்றிக்கொள்கிறது வண்டி.


வண்டியிலேறிய இரு வயதான பெண்கள் அந்த காலியான சீட்டில் உட்கார……தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் நிற்க வேண்டியதாகியது.


கண்டக்டருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,  டிரைவருக்கோ பலமான சிரிப்பு..


வயதான அந்த இரு பெண்களிடமும், பேசி சரிகட்டி, ஒருவரை பின்னாலிருந்த தன் நடத்துனர் இருக்கைக்கு அனுப்பிவிட்டு, டிரைவருக்கு எதிரிலிருந்த ஒற்றை சீட்டிலிருந்த பெண்மனியை கெஞ்சி, பின்னிருக்கைக்கு அனுப்பிவிட்டு, 

என்ஜின் மீது அவர் அமர்ந்து, ஒற்றைக் காலியிடத்தில் அந்த பெண்ணை அமரச் சொன்னபோது………


பஸ் திருச்செங்கோடு அடைந்திருந்தது.........

கண்டக்டர் கெஞ்சிய விழிகளுடன்............இல்லடா......இன்னிக்கு நேரமே.....சரியில்லை.....சாரிடா..........


அந்தப்பெண்..:.......இதுக்கொன்னும் கொறச்சலில்லை........தூ......நீயெல்லாம் ஒரு கண்டக்டர்?    என்ற கோபப்பார்வை வீச  

டிரைவர் ...:............இதுக்குத்தான இத்தன அளப்பறையும் என்று ஏளனப்பார்வை வீச




எனக்கு மட்டும் ஏனோ அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.........
.நானும் இப்படித்தான் ..........ஒரு காலத்தில்..........





அவளின் பார்வை வீச்சிற்காய் காத்திருந்திருக்கின்றேன்........
வீச்சின் வேகம் நிறைதலால் 
பலமுறை காயப்பட்டிருக்கிறேன்..........ஆனாலும்...........
 .காத்திருந்திருக்கின்றேன்...........




மனமெங்கும் 
நிறைகின்ற
வலியைத், தின்கிறது-காமம்.
தீர்ந்தபின்

மீண்டும் வலியைத் தேடுகிறது


காதலென்ற பெயரில்...........




அன்புடன்
ஆரூரன்