அதிகாலை 5 மணி
அரை டம்ளர் டீயிக்காய்
அவசரமாய் காத்திருந்தேன்
ஆறுமுகம் கடை வாசலில்
,
பஞ்சடைத்த உடல்
பசி அரித்த குடல்
கந்தையிலும் கந்தையாய்
எனக்கருகில் ஒருவன்
ரத்தத்தில் ஏறிப்போன சர்க்கரையால்
பாய்லர் பாலை விட கொதிப்பில் நானும்,
எச்சில் டீயாவது கிடைக்காதா என்று
ஏங்கி அந்த கிழட்டுப் பிச்சைக்காரனும்
அவசரமாய் டீ அடித்து
நடுத்தெருவில் கொட்டினான்
அந்நாள் நன்றாய் இருக்க
அன்னை பூமிக்கு அவிற்பாகமாம்
