Showing posts with label பார்ப்பணீயம். Show all posts
Showing posts with label பார்ப்பணீயம். Show all posts

Wednesday, December 30, 2009

வெண்ணைய் வெட்டி வினவுக்கு……......

அதிமேதாவி, ஆல் இன் ஆல் அழகு ராசா வணக்கம்

// உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?//

ஊர் உலகமென்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்ற முடிவுக்கு வந்த  பின் என்னாத்துக்கு முன்னாடி பெரிய பில்டப்பு?  நாங்களும் ரவுடி தாண்டி(அதான் அரசியல்வாதி தான்னு) சொல்லிக்கவா? மலையளவு விசயங்கள் எழுத இருக்கும் போது நாம ஏன் இந்த மயிரு புடுங்கற  விசயத்துக்கு வந்தோம்………


//இரவு நடந்த மதுவறைக் கொண்டாட்டங்களில் பேசப்பட்ட வரலாற்றுப் புகழ் விவகாரங்கள் காதுகளுக்கு வரவில்லை என்பதைத் தாண்டி எதையும் நொள்ளை சொல்வதே வினவின் குணம் என்பதால் விட்டுவிட்டு மேலே செல்வோம்.//

பக்கத்தூட்ல என்ன நடக்குதுன்னு, ஒட்டுக் கேக்கிறத நிறுத்தினாவே, போதும் எல்லாப் பிரச்சனையும் தன்னாலே ஓய்ந்துவிடும்.  அதுசரிஅத நிறுத்திப்போட்டா பொழப்புக்கு எங்க போறது.?????????? அவன் கழுவியிருக்கானா? இவன் கழுவியிருக்கானான்னு பாக்கறது தான் பொழப்பே, அப்புறம் அதுல குணத்த பத்தி என்ன சுய விமர்சனம்.


//யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன?//

ஒரு தேசிய இனம் அடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, சுய நிர்ணய உரிமைக்காக, ஏகாதிபத்தியங்களுக்கெதிராக போர் தொடுத்த வேளையில் சர்வ தேசியம், வர்க்கப் போராட்டம் என்று மட்டுமே   பேசச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும்,  யாரையோ ஏமாற்ற, அல்லது திருப்தி படுத்த , முன்னெச்சரிக்கையாக  தமிழ்தேசியம் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோகும் என்று நீங்களே பேசும் போது, அவர் எம்மாத்திரம்.

//அதிலும் நற்குடிபெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது?//

ஏகாதிபத்தியத்தியத்தின்,  கொடுமையான விளைவுகளே, சமூக  சீர்கேடுகள்.   சாதி, மதம், இனம், போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி, வர்க்க அடையாளங்களை அழிக்கப் பார்க்கின்றன என்று பேசிய நாம், இன்று, சமூக சீர்கேடுகளை நீக்கப் பாடுபடுவதன் ரகசியமென்ன?  மாடு போடும் சாணிகளை பொறுக்கி விட்டால், இனி குப்பையாகாது என்ற நம்பும் முற்போக்கு சர்வதேசிய சிங்கமளவிற்கு, பதிவுலகத்திற்கு பத்தாதுதான்.


//இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம்.//

 பஸ் ஸ்டேண்டு கக்கூஸ்ல பக்கத்து அறையில இருந்தவன் உளரலை அரைகுறையா கேட்டுகிட்டு,  ஏதோ தானே பக்கத்துல இருந்து பார்த்து, படிச்சு,  மாதிரி எழுதுவதுதான் சகிக்கவில்லை.   சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் வைரஸ்ல இருந்து திரும்பி வருவதற்குள் எடுக்கப்பட்டு விட்டன.   அப்புறம் எங்கிருந்து இதெல்லாம் படிச்சீங்க.இழவு திருந்த மாட்டீங்களே……..

வடிவேலு சொல்லுற மாதிரி, எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறீங்களே ……அது எப்புடிங்க……?


//பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட  சுகுணாதிவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.//

அடக்கருமமே…………சம்மந்த பட்ட பதிவர், சுகுணாதிவாகர் வேற, சுகுணா ..திவாகர் வேறன்னு எழுதறாங்க……நீங்க ஏன் புதுசா வந்து எங்கப்பன் குதுருக்குள்ளேன்னு……..

//நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?//

நாலு நல்ல கம்யூனிஸ்டுகள வச்சிகிட்டு(அவுங்களும் நல்ல கம்யூனிஸ்டான்னு மற்ற மார்க்ஸிய தோழர்களைத்தான் கேக்கனும்) நீங்களே 30 வருசமா பொழப்ப ஓட்டும் போது, மத்தவங்கள பேசற யோக்கிதை  எங்கிருந்து வந்தது.

 ஜெயேந்திர பார்ப்பானை நாங்க மறைக்கிறோம், நீங்க என்ன பண்ணிங்க,,,,,?  10க்கு 10 மேடையில் மைக் புடிச்சு நாலு கூட்டம் போட்டிருப்பீங்களா?   அதுக்கப்பறம்???????  

 எங்கடா எழவு வுழும்,  திங்கறதுக்கு பொணம் கிடைக்குன்னு அலையற உங்களுக்கு, பொண்ணு செத்தா என்ன? மாப்பிள்ளை செத்தா என்ன? பொணம் கிடைச்சா சரி………

அப்பவே பல நண்பர்கள் போன் பண்ணி சொன்னாங்க……” அது ஒரு காமெடி பீஸுங்க”   அதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்னு.

தமிளு, திராவிடன்னு பேசியே ஒருத்தன் நாற்பது ஐம்பது வருசமா தாலியறுத்தான், அவனையே பொறுத்துகிட்டோம்…….  பெண்ணீயம், பார்ப்பணீயம், சாமீயம், சர்வ ரோக நிவாரணம்அதான், சர்வதேசியன்னு, நீங்க பேசறதையும் பொறுத்துகிட்டு இருக்கோம்..ஏன்யா இப்படி பேசிறீங்கன்னு என்னைக்காவது கேட்டிருப்பமா? 

கடைசியா ஒன்னு சொல்லறன் இப்பவாவது திருந்துங்க……..அரிப்பெடுத்தா சொறிய, நாங்களா கிடைச்சோம்.     எத்தனை பேர் மப்புக்குத்தான்  நாங்க ஊறுகாயா இருக்கிறது?



 அதொட மட்டுமில்லாமல், எந்த சாமியாவது காப்பாத்தாதான்னு, ஏங்கிப்போய், வாங்கும் சம்பளத்தில் உங்களுக்கும் மாமூல் கட்டிவிட்டு (சந்தா-ங்கற பேர்ல வாங்கரீங்களே) உங்க அதிமேதாவிதனங்கள கேக்க ஊருக்கு பத்து அப்பாவிகள் இருக்கிறார்களில்லையா?அவர்களையெல்லாம் போய் முதல்ல காப்பாத்துங்கய்யா……


எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்.நீங்க போய் உங்க ஒலக பிரச்சனைகளைப் பாருங்க சர்வதேசிய பிரச்சனைகள் நிறைய காத்துகிட்டிருக்கு உங்களுக்காக..

அதெல்லாம் விட்டுபோட்டு, எதுக்கு இந்த வெண்ணை வெட்டி வேலை., பொரட்சி, கிரட்சி  பண்ணி எல்லாதையும் காப்பாத்தர வேலைய பாருங்க…….


எங்களைய வுட்டுருங்கய்யா………..