Showing posts with label ஆண் பாவம்.....-1 புனைவு. Show all posts
Showing posts with label ஆண் பாவம்.....-1 புனைவு. Show all posts

Thursday, September 23, 2010

ஆண்......பாவம்........

 


பொதுவுடமை தத்துவம்

கலைந்த தலை
எண்ணை வடியும் முகம்
வீச்சமாய் ஒரு நைட்டி
விதரணை யில்லாப் பேச்சு
வீட்டுக்குள் இவள்.....

முடிந்த அளவு தவிர்க்கின்றேன்
இவளின் பார்வையை


மலர்ந்த முகம்
அலை கூந்தல்
தளிர் நடை
அழகில் சோலை
கடைத் தெருவில் அவள்

தாண்டிச் சென்ற பின்னும்
தொடர்கின்றேன் திருட்டுதனமாய்............

அவர்கள் கடந்ததும்
திரும்பிப் பார்த்து........

த்தூ..இவனும் ஒரு மனிதனா?
எப்படி வெறித்துப் பார்க்கிறான்?.
சொன்னாள் என்னவள்

திரும்பிப் பார்க்கிறேன்
தாண்டிச் சென்றவளை.....
அவளும் திரும்பி ஏதோ
சொல்கிறாள் அவனிடத்தில்.....

இதைத்தான் அவளும் சொல்லியிருப்பாளோ!!


ஏனோ நானும் அவனும்
வெட்கப்படவில்லை.
வேதனைப் படவுமில்லை.
எவன் சொன்னான் -தோற்றுவிட்டது
பொதுவுடமை தத்துவமென்று.