Thursday, March 05, 2009

சீக்கிரம் விழி தமிழா ..........
புறப்படப்போகிறது நம் கடைசிப் பேருந்து.

அதிகார வர்க்கம் என்றும் நம்மை ஆளத்தொடங்கும் போது தன் கோரக்கைகளை தம்மோடு இருக்கும் கைக் கூலிகளை கொண்டு மறைத்துக் கொண்டுதான் நெருங்கி வருகின்றன. எந்த ஒரு இனமோ, அரசோ, கொள்கையோ அழிக்கப் படுவதற்க்கு, அதற்குள்ளாகவே, அது சார்ந்த எட்டப்பர்களின் உதவி அவசியமாகிறது. அதிகார வர்க்கத்தின் எடுபிடிகளாக இருந்து கொண்டு, தான் உயர்ந்தவன், அல்லது உயர்ந்தவனுக்கு சமமானவன் என்ற நினைப்பினால் தான் பார்ப்பண சமூகம் ஒருகட்டத்தில் செயல்பட்டு வந்தது, ஒரிரு இடங்களில் இன்றும் செயல்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் அடிவருடிகளான இந்த சமுதாய்ம் தமிழ்ச் சமுதாயத்தின் மீது தனக்காக எந்த ஒரு நேரடியான அடக்குமுறையையோ, அடிமைத்தனத்தையோ ஏற்படுத்த வில்லை, மாறாக தன் சுயநலனுக்காக, தனக்கென ஒரு தர்மத்தை, நியாயத்தை ஏற்படுத்திக் கொண்டு எவனோ ஒரு முதலாளிக்காக செயல் பட்டுவந்தனர். தமிழ் நாட்டில் பார்ப்பண எதிர்ப்பியக்கம் தொடங்ப்பட்டதும் ஆதிக்க சமுதாயத்தின் இந்த திருட்டு வேளைகளுக்காகத்தான். எச்சைச் சோற்றுக்கு அலையும் இந்த கூட்டத்தில் இன்று எல்லா சமூகத்தினரும் இணைந்துள்ளனர். சாதி மேட்டுக்குடி இந்துக்கள் தான் உண்மையில் மற்றவர்களை அடிமைகளாக வைத்திருந்தனர், அதற்கு இந்த பார்ப்பன சமுதாயம் உடந்தையாக இருந்தது. ஆங்கிலேயர்களிடம் தங்கள் படிப்பறிவின் மூலம் ஒட்டிக் கொண்ட இந்த சமூகத்தின் பலரும் தன்னை வளர்த்துக் கொள்ள எதையும் செய்யத் தயாரயினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மையான இடங்களில் பிற சாதி மேட்டுக் குடி இந்துக்கள் தான் தாழ்த்தப் பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

பார்ப்பண எதிர்ப்பியக்கம், முதலாளிதத்துவ ஆதிக்க சமுதாய வளர்ச்சி என்பதெல்லாம் நம்மை ஏமாற்ற நம்முடன் இருக்கும் இந்த கருங்காலி கங்காணிகள் எழுப்பும் பசப்பு வார்த்தைகளன்றி வேறு என்ன? அடுத்தவனை அண்டிப்பிழைத்தும், சுரண்டித்தின்றும் பழக்கப் பட்ட இவர்களுக்கு இன்று விழித்த்ழுந்துள்ள கூட்டத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பொழுது இப்படி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பேசுவது வழக்கம் தானே. அறிவியற்பூர்வமாக தவறு செய்வதை கற்றுவைத்துள்ள இவர்களது திறமை தான் அன்றே கச்சேரிக்கு வந்ததே. தன் தொடக்க காலத்தில் காங்கிரஸ் தலைமையயை எதிர்க்க இவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள் தான் இந்த பார்ப்பண எதிர்ப்பியக்கம், சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, தனி தமிழ் தேசியம் என்பதெல்லாம்.. இந்திய தேசியம் என்பது வெறும் பார்ப்பண வல்லாதிக்க குழுக்களின் ஏமாற்று வித்தை எனக் கொள்வது சரியல்ல. அது ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் வெளிப்பாடு.


உலகம் முழுவதும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக குரல் கொடுக்கப் பட்டுவரும் இந்த வேளையில், இந்த கைக்கூலிகள் மட்டும் கத்தியை கீழே போட்டு விட்டு வா, பிறகு பேசலாம் என்கிறார்கள். யார் கத்தியை போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? ஆயுதங்களை கை விட வேண்டியது விடுதலைப் புலிகளே தவிர அங்கு அவதிப் படும் அப்பாவித்தமிழர்கள் அல்ல. பச்சிளங்குழந்தைகள், பள்ளிச்சீறார்களின் மீது குண்டெறிந்து கொன்றார்களே, அவர்களை விட்டுவிட்டு “ உன்னைக் காப்பற்ற வேண்டுமெனில் அவனை கத்தியயை கீழே போடச் சொல்” என்பது தான் உங்கள் நாகரிகமா? இவர்கள் எஜமான விசுவாசத்தை பாராட்ட வார்த்தகளே இல்லை.

உலகெங்கிலும் தமிழனின் துரோகி இன்னொரு தமிழன் தான். இலங்கையிலாகட்டும், மலேசியாவிலாகட்டும், தமிழகத்திலாகட்டும், நம்மை வைத்துச் சீட்டாடியவர்கள், நம் தமிழ் தர்மதுரைகள் தான். பெருகிவரும் இனத்துரோகிகளின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது, இன்னொரு அழித்தொழிப்பு இங்கும் அவசியாமாகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.



சரி விசயத்திற்கு வருவோம்……

தமிழ்ப் பற்றும், இன உணர்வும் உள்ள தலைவர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு சிறுதுளியான என் வேண்டுகோள்.

1. இந்த பாராளுமன்றத் தேர்தலிலாவது இரண்டு திருட்டு (திராவிட) கட்சிகளையும், இந்திய தேசியம் பேசும் அயோக்கியர்கள் கூட்டத்தோடும் எந்த கூட்டணியும் இல்லாமல் இன உணர்வோடு அனைவரும் ஒன்று திரண்டு தேர்தலை சந்தியுங்கள். துரோகிகளை அடையாளம் காட்டுவோம்.
2. தெலுங்கானா கொள்கையாய் முன் வைத்து தேர்தலை சந்தித்தவர்களை தயவு செய்து பாருங்கள். இன உணர்வு கொழுந்து விட்டு எரியும் இந்த சூழ்நிலையில், தடுமாறும் தமிழினம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றும். இன உணர்வாளர்களே ஒன்று கூடுவோம்.
3. வழக்குரைனர்கள், மாணவர்கள், சீமான்கள், ஊடகவியலாலர்கள், கல்வியாளர்கள், அர்சியல் சாராத இன உணர்வாளர்கள், உள்ளிட்ட ஒரு பெருங்கூட்டம் உங்கள் பின்னால் வர காத்திருக்கிறது. நெடுங்கனவான தமிழ் தேசியத்தை காண இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.
4. ஒருவேளை, பாரளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற முடியவில்லை என்றால், வரும் சட்டமன்றத்தேர்தலில் உங்கள் ராஜ் தந்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை இன்று உள்ள நிலைக்கு உயர்த்திய தமிழனுக்காக இதையாவது செய்யுங்கள்
5. சூழ்நிலைகளின் அடிப்படையில் தான் பெரும் தலைமைகள் உருவாகி உள்ளன. அஸ்ஸாம் கண பரிஷத்தும், தமிழ் மாநிலக் காங்கிரஸும், ராமாரவ் தலைமியிலான் தெலுங்கு தேசமும், எம்.ஜி.ஆரின் அதிமுக, என இப்படிப் பல் கட்சிகள் சூழ்நிலையின் தாக்கத்தில் தான் பெரும் வெற்றி பெற்றன் என்பதை நீங்கள் அறிவீர்கள். வெற்றி பெற்றபின் அந்த தகுதிக்கு தன்னை ஆட்ப்டுத்திக்கொள்ளாதவர்கள் நிலைத்திருக்க முடிவதில்லை. எடுத்துக் காட்டு: தமிழ் மாநில காங்கிரஸ்..
6. தமிழார்வமும், இன உணர்வும் கொண்ட நீங்களே, பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து கிடந்தால் உங்களை நம்பி இருக்கும் எம் போன்ற தமிழரெல்லாம் எங்கு செல்வது. மேடைகளில் உங்கள் முழக்கத்தை கேட்டுவிட்டோம். உங்கள் முகஙகளையும் காட்டுங்கள். தமிழீழ எதிர்ப்பு அதிமுகவுடனோ, திருட்டுத் தலைமை திமுகவுடனோ, தேசிய இனங்களை அடக்கி வரும் எந்த தேசிய கட்சிய்னருடனோ கூட்டணி வைத்தால், இந்த தமிழ்ச் சமுதாயமும் உயிர் நீத்த தோழர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

No comments :