Thursday, November 05, 2009

ஆசை முகமறந்து போச்சே............இறுதிபதிவு


அவள்:

படித்தவள்.  குடும்பத்தின் செல்லப் பெண்.  பெற்றோரின் 
பாதுகாப்பில் வளர்ந்த உலகமறியாச் சிறுபெண். வீட்டை 
விட்டு தனியே வெளியே சென்றறியாதவள். 
கேட்டதெல்லாம் கிடைக்கும். 

தாய், தந்தை, சகோதரர், நெருங்கிய உறவுகள் என்ற
சிறு கூட்டில் வளர்ந்தவள்.  மிக நெருங்கிய 
நட்பு, ஓரிரண்டு கல்லூரித் தோழிகளும் பக்கத்து
தெரு பிள்ளையாரும்.

தந்தை நடத்திவந்த மருத்துவமனையை நிர்வகிக்கும்
பொறுப்பு, ஆட்கள் நியமனம், மருந்து விற்பனை 
ஆகியவற்றில் பொழுது போக்கிற்காக நுழைந்தவள்,
பின் அதுவே பணியானது. தந்தையின் பணிச்சுமை
குறைந்தது.


மனதில் பட்டதை பளிச் என்று சொல்வது அவள் இயல்பு.  
அடுத்தவர் விசயங்களில் தலையிடுவதோ யோசனை 
சொல்வதோ அவளுக்கு பிடிப்பதில்லை.   

சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டையிடும் பெற்றோர்
களின் மீது வருத்தம் இருப்பினும்வெளிக்காட்டிக் கொள்ளாதவள்.
தன் திருமண வாழ்வு நிறைவாக இருக்க வேண்டும் என்ற
சராசரி பெண்ணில் அவளும் ஒருத்தி.

“வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி”

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி”
                                                        


இப்படித்தான் அவள் கனவு கண்டாள். 


இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் கனவு காண்பாளோ?. 
தன்னை உண்மையான அன்போடு காதலிக்கும்
ஒருவனைத்தான் ஒவ்வொரு பெண்ணும் தேடுகிறாள். 
இங்கே கற்பிதங்கள் அதிகம்.  கட்டுப்பாடுகள் அதிகம்.


பெண்ணுக்கு இங்கே காமத்தை விட பல பெருந்துயர்கள்
இருக்கின்றன. பண்நெடுங்காலமாய் சொல்லித்
தந்ததெல்லாம், தவறு என்று உறுதி செய்யப்பட்டு விட்டது.


இந்த யுகத்தில் பிறந்த பெண் அடுத்தவரின் 
தேவைகளுக்கான வடிகாலாக இருக்க முடிவதில்லை.
அவளுக்கென்று ஒரு ஆசை, விருப்பம் இருக்கின்றது. 


“தன்னை நேசிப்பவனாக, தன்னை மதிப்பவனாக, தன்னை
கொண்டாடுபவனாக, தன்னை தனக்குச் சமமாக
நடத்துபவனாக, ஒரு தோழியாக ஏற்றுக் கொண்டு விருப்பு
வெறுப்புகளை ஏற்றுக் கொள்பவனாக, ஒரு நண்பனாக,
தோழனாக,நல்ல வழிகாட்டியாக,  இருக்கும் ஒருவனே
இன்றைய பெண்ணின் கணவனாக இருக்க வேண்டும்
என்பது எல்லாப் பெண்களின்ஆசையும், தேவையுமாய்
இருக்கிறது.”

 தன் தாயுடன் மனைவியை ஒப்பிட்டுப் பேசுவது 
போன்ற மடத்தனம் இந்த உலகில் இல்லை.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” 
இருந்ததெல்லாம் சரி, அன்றைய நிலை வேறு,
வாழ்க்கை முறை வேறு. 


அன்று என் தந்தையின் விருப்பம் எதுவோ அதுவே 
என் தாயின் விருப்பமாக இருந்தது.  என் தந்தைதான்
எல்லா முடிவுகளையும் எடுத்தார். பொருள் ஆதாரம்
அவர் கையில் இருந்தது ஒரு காரணம் மற்றொன்று, என் 
தாய் படித்தவளில்லை, அவளுக்கென்று ஒரு உலகம்
இல்லாமலிருந்தது.  அல்லது அவள் உலகம் வெளியே 
அவளால் சொல்லப்படாமல் இருந்தது.


அடக்கி வைக்கப் பட்ட தாய், தன் குழந்தைகள் 
பெரிதானதும், அவர்கள் துணண கொண்டு தான் 
குடும்பத்தலைவி என்ற பட்டமும் பெற முடிந்தது.
வயதான பெண்மணிகள் தங்கள் சுதந்திரத்தை பார்க்க
முடிந்ததே, குழந்தைகள் பெரியவர்கள்
ஆன பின் தான்.  இங்கே அடிப்படை பொருளாதாரம். 

ஒருவேளை என் தாயிற்கும் அந்த பொருளாதார சுதந்திரம்
இருந்திருக்குமானால், ஒருவேளை 
50 ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தைக்கு
விவாகரத்து கிடைத்திருக்கும்.

பெண்ணின் சமூகம் சிறியது.  அவள், பெற்றோர், 
அல்லது கணவன் சகோதரர், நெருங்கிய உறவுகள்
இப்படி முடிந்து விடுகிறது.  அதைத்தாண்டி அவள் 
எதற்கும் பெரிதும் யோசிப்பதில்லை.  
அவளுடைய வட்டம் சிறியது.

சமூக கோட்பாடுகள் எல்லாம் பெண்ணை மையமாக
வைத்துஆண்களால் உருவாக்கப்பட்டதே தவிர, 
அது எந்தப் பெண்ணையும் சரியா? தவறா? என்று
கேட்க வில்லை.


நாரணன் நம்பி கைத்தளம் பற்றிட கனாக் கண்டாள் 
என்பது உண்மைதான். ஆனால் அதற்காக தன் விருப்பு
வெறுப்புகளை மீறி அடுத்தவனை சார்ந்து, 
அவனடிமையாய், வாழ எங்கு எந்தப்
பெண்ணும் தயாராக இல்லை.

எதையும் வெளிச்சொல்லாமல் தனக்குள் புதைத்து,
தானே விடைதேடும், முயற்சியில்  தோற்றும் சில
சமயங்களில் ஜெயித்தும் கண்ணாமூச்சி ஆடும் ஆணும்,

தன்னை சமமாக மதித்து, சுக துக்கங்களை பகிர்ந்து
கொள்ள வேண்டும், முடிவுகள் எடுக்கும் போது
தனக்கும் உரிய இடம் தரவேண்டும் என்ற சராசரி
சாதாரண ஆசைகளுடைய பெண்ணும் திருமணம் என்ற 
பந்தத்தில் ஒன்றினைவதுதான் விசித்திரம்.

எங்களிருவரின் தேவைகளும், ஆசைகளும் ஒன்றாய்
தெரிந்தாலும் அடிப்படையில் வேறு வேறு…….
நாங்களிருவரும் திருமணம் செய்து கொண்டோம்……… 
எப்படி நடத்துவது வாழ்க்கையை……?

அறுபது வயதில் என் தாயும் தந்தையும் மிக அன்போடு 
ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்கிறார்கள் என்று
சொல்லுகிறார்கள். இதில் இரண்டு விசயங்கள்.  ஒன்று 
அவளுக்கு அது பழகிப்போய்விட்டது. இரண்டு 
ஒவ்வொருவருக்கும் மற்றவரின் தேவை 
இந்த வயதில் தான் மிகஅதிகம்.

பரபரப்பான இந்த உலகில் அமைதியாக,
நிதானமாக நின்று செயல்படுவது அவர்கள் மட்டுமே.

வயதான பாட்டிகள் தங்கள் கணவர்களை கை பிடித்து 
அழைத்துச் செல்வதை தெருவிலும் கோவில்களிலும்
காண முடிகிறது. அவர் சிறிது அதிகமாக மூச்சு விட்டால்
கூட சிறிதுஉட்காருங்கள், தண்ணீர் வேண்டுமா? என்று
அக்கரை காட்டுவதை பார்க்க முடியும்.


இனிவருங்காலங்களில் இது போன்ற காட்சிகளை 
பார்க்கமுடியுமா? எந்தையும் தாயும் மகிழ்ந்து 
குலாவி இருந்த நாடு என்று நம் குழந்தைகளும்,
பேரக் குழந்தைகளும் பாட வழி இருக்குமா?

எல்லா வழக்குமன்றங்களிலும் விவாகரத்து வழக்கு
குவிந்து கிடக்கின்றன. குடும்ப நல
ஆலோசகர்கள் நிரம்பி வழியத்தொடங்கியுள்ளனர்.

 

தினசரிகளைப் பார்க்கும் பொழுது கற்பழிப்பு 
ஒழிக்கப்பட்டு கள்ளக் காதல் அங்கீகரிக்கப்
பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.இதில் கூட
கள்ளக் காதல் செய்த பெண்தான் பெரும் குற்றவாளியாக
ஊடகங்களினாலும் காவல் துறையாலும்
சித்தரிக்கப் படுகிறாள். பெண்ணின் விருப்பின்
பேரில் ஆண் கருவியாகச் செயல்பட்டதாகத்தான்
வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சக மனுசியாக 
மதிக்கப்படாத பெண், இங்கே அன்பான, தோழமையைத்
தேடுகிறாள். அன்பானவனாக, தோழனாக, நல்லவனாக
காட்டிக் கொள்ளும் ஆண் சரியான சமயத்தில் அவள்
உடலையும் செல்வத்தையும் தனதாக்கிக் கொள்கிறான்.

அந்த நேரத்தில் அவளால் அந்த நட்பை, உறவை 
உதறித் தள்ளமுடிவதில்லை. 

இது யதார்த்தம்..




ஆண்/பெண் மன நிலையையும் சமூக நிலையையும்
மனதில் வைத்தே இந்தப் பதிவு.  என் இந்த புரிதல்
தவறாகக் கூட இருக்கலாம்.

"சொல்வதைச் சொல்லிவிட்டேன்
மகனே/மகளே இனி உன் சமத்து" என்பது போல்
மன நிலைகளையும் தேவைகளையும்
ஓரளவிற்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.

ஏதாவது(ஆண்) மனம் புண்பட்டிருப்பின் வருந்துகிறேன்.



என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்ற 
கவலையில் எழுதப்பட்டதே இந்தத் தொடர்.
                                                    


                      விமர்சனங்களை வரவேற்கிறேன்.


22 comments :

பழமைபேசி said...

// விமர்சனங்களை வரவேற்கிறேன்//

இடுகைய நான் இன்னும் வாசிக்கலை! நன்றாக வரிசைப்படுத்தி(format) வையுங்க... சாயுங்காலம் மறுக்கா வாறேன்!

---ஆப்பு-1

ஆரூரன் விசுவநாதன் said...

பண்டீட்டனுங்னா....... சாயந்தரம் வந்து பாத்துபோட்டு போயிராதிங்ணா..... செரியா இருக்கான்னு சொல்லிபோடுங்ணா....

ஆரூரன் விசுவநாதன் said...

மொத ஆப்பே எனக்கா.....அவ்....

vasu balaji said...

/ இந்த யுகத்தில் பிறந்த பெண் அடுத்தவரின் ...
இந்த வயதில் தான் மிகஅதிகம்./

மிக மிகத் தெளிவாக மறுபக்கத்தையும் பார்த்தாலே ஒழிய இந்த தெளிந்த உணர்வு வரமுடியாது. எனவே நாரணன் நம்பிதான் நீங்கள்.

மிகச் சிறப்பான புரிதல் ஆரூரன்.

vasu balaji said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

// கள்ளக் காதல் அங்கீகரிக்கப்
பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது//

நீங்க இப்படிச் சொன்னா... அதேயேன் படிக்கிறீங்கனு யாராவது சொல்லுவாங்க...

அங்க இங்க நடந்த சில விசயங்கள திரும்ப திரும்ப பத்திரிக்கையில போட்டு இதெல்லாம் சகஜம்னு பழக்கிவிட்டுட்டாங்க

அன்புடன் நான் said...

பரபரப்பான இந்த உலகில் அமைதியாக,
நிதானமாக நின்று செயல்படுவது அவர்கள் மட்டுமே.

வயதான பாட்டிகள் தங்கள் கணவர்களை கை பிடித்து
அழைத்துச் செல்வதை தெருவிலும் கோவில்களிலும்
காண முடிகிறது. அவர் சிறிது அதிகமாக மூச்சு விட்டால்
கூட சிறிதுஉட்காருங்கள், தண்ணீர் வேண்டுமா? என்று
அக்கரை காட்டுவதை பார்க்க முடியும்.


இனிவருங்காலங்களில் இது போன்ற காட்சிகளை
பார்க்கமுடியுமா? எந்தையும் தாயும் மகிழ்ந்து
குலாவி இருந்த நாடு என்று நம் குழந்தைகளும்,
பேரக் குழந்தைகளும் பாட வழி இருக்குமா?

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் கருணாகரசு....

ஆரூரன் விசுவநாதன் said...

//நாரணன் நம்பிதான் நீங்கள்.//

பாலாண்ணே.....இது என்ன உள்குத்து

பிரபாகர் said...

//வயதான பாட்டிகள் தங்கள் கணவர்களை கை பிடித்து
அழைத்துச் செல்வதை தெருவிலும் கோவில்களிலும்
காண முடிகிறது. அவர் சிறிது அதிகமாக மூச்சு விட்டால்
கூட சிறிதுஉட்காருங்கள், தண்ணீர் வேண்டுமா? என்று
அக்கரை காட்டுவதை பார்க்க முடியும்.


இனிவருங்காலங்களில் இது போன்ற காட்சிகளை
பார்க்கமுடியுமா?//

மிகவும் கஷ்டம். நவீனத்தால் நாம் நிறைய இழந்து வருகிறோம்... இதெல்லாம் நாம் கொடுக்கும் விலை.

எல்லோருக்கும் நிறைய விவரம் தெரிகிறது. ஊடகங்கள் தேவையற்றவற்றை நிறைய தெளிக்கின்றன...

முழுதும் படித்தேன், மிக அருமை.

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பிரபா.......

கலகலப்ரியா said...

:-) prammaatham ponga..!

ஹேமா said...

சரியான கணிப்பு.இதைவிடுத்து அன்றைய பெண்கள் இன்றைய பெண்கள் என்பது ஏன் ?அருமையான புனைவு ஆரூரன்.புனைவென்றே சொல்லமுடியாமலிருக்கிறது.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா......

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா......

பழமைபேசி said...

நிறைவா இருக்குங்க நண்பரே!

நாகா said...

நன்றாய் இருக்கிறது ஆனால் பாலகுமாரனின் தாக்கம் உங்களுக்கு அதிகம் போலும், சில சொற்கள் அவர் பிரயோகிப்பது போன்றே உள்ளன.

ராஜவம்சம் said...

//ஏதாவது(ஆண்) மனம் புண்பட்டிருப்பின் வருந்துகிறேன்//


ஏதாவது(ஆண்)ஒரு மனம் திரு(ந்)தும் என்றால் எனக்கு ரொம்ப சந்தோஸம் நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி.ராஜவம்சம்

என்னுடைய எண்ணமும் அதுதான்

ஆரூரன் விசுவநாதன் said...

//நாகா//

நன்றி நாகா.....நிறைய பேரின் பாதிப்பு எனக்கு உண்டு........இருந்தாலும் நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது.

அன்பிற்கு மீண்டும் நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமைபேசி//

நன்றி நண்பா.....