Saturday, December 05, 2009

ஈரோட்டுக்கு வாங்கண்ணே.......



வலைப்பதிவர் சந்திப்பு


ஊரு கூடி தேர் இழுக்க ஆசைதான்
உருப்படியா ஏதும் செய்ய ஆசைதான்.



அக்கத்தூரு பக்கத்தூரு அத்தனைக்கும் சொல்லிவிட்டு
ஆசப்பட்டு அனைவரையும், அன்பொழுக அழைச்சிகிட்டு
சீக்கிரமே ஊரு வந்துடு –செல்லக்கண்ணு
சீமைக்கார மாமன் வரார் செல்லக்கண்ணு.



பட்டணத்து பதிவரெல்லாம் பவிசாக வருவாங்க
பக்கத்தூரு பதிவர்களும் பள பளன்னு வருவாங்க
ஏழெட்டு ஊர் பதிவரெல்லாம்-செல்லக்கண்ணு
எறங்கி இங்கே வாராங்கடி செல்லக்கண்ணு



கதிரு கூட சேர்ந்துகிட்டு, அகல்விளக்கும்
பாலாசியும், வாலுகூட நானுந்தான்
பதிவர்கள அழைக்கப்போறோம்-செல்லக்கண்ணு
பகிர்ந்துகொள்ள விசயமிருக்கு செல்லக்கண்ணு


மாசம், இந்த திசம்பர்தான், தேதி வரும் இருபது
இனிமையான மாலையில், இனிப்புடனே தொடங்கித்தான்
இரவு வரைக்கும் தொடருமடி- செல்லக்கண்ணு
ஈரோட்டில் நடக்க போகுது செல்லக்கண்ணு



 ஊரு கூடி தேர் இழுக்கும் முயற்சிதான்
உருப்படியா ஏதும் செய்ய விருப்பந்தான்
வலைப்பதிவர் எல்லாருமே- செல்லக்கண்ணு
பதிவு செஞ்சு கலந்துக்குங்க செல்லக்கண்ணு










28 comments :

கலகலப்ரியா said...

=))... ஆரூர்..! அது என்ன வாங்கண்ணே? அம்மணிங்க வரப்டாதோ..? தீர்ப்ப... ஐ மீன்... தலைப்ப மாத்திச் சொல்லுங்க..=)

vasu balaji said...

ஆரூரன்! கொள்ள அழகு அழைப்பு. அசத்திப்புட்டீங்க. லேபில் சாதிப்பு ரொம்ப பொருத்தம். அசத்துங்க.வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

ப்ரியா....

மாப்பு.....அம்மிணி மாப்பு

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே......

கண்டிப்பா வந்து கலந்துங்க...

சத்ரியன் said...

ஆ.வி.

மன்னிச்சிக்கனும்.... நானெல்லாம் வந்து கலந்துக்கிற முடியாது.(ரொம்ப தொலைவில இருக்கிறேன்) நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்துகளை மட்டும் அனுப்பி வெக்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

கண்டிப்பா வந்து கலந்துக்குங்க...

சத்ரியன் said...

ஆ.வி.

அந்த 'லேபிள்' சந்திப்பா, சாதிப்பா?

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு
நன்றி சத்திரியன்.....

ஆரூரன் விசுவநாதன் said...

சாதிக்கப் போகும் சந்திப்பு சத்திரியன்

Thamira said...

சுவாரசியம். வாழ்த்துகள்.!

பழமைபேசி said...

செல்லக் கண்ணுவை பார்த்தே ஆகணும்.... இஃகிஃகி!

பழமைபேசி said...

//Labels: sathippu //

excuse me sir... what is this? சாதிப்பு??

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி.....ஆதி

ஆரூரன் விசுவநாதன் said...

//பழமை பேசி//
செல்லக் கண்ணுவை பார்த்தே ஆகணும்.... இஃகிஃகி


சீமைக்கார மாமா....கொஞ்சம்
சீக்கிரமா வாங்க....

ஆரூரன் விசுவநாதன் said...

//Labels: sathippu //

வந்து பாருங்க.....என்ன சாதிக்கறமின்னு....

ஹி....ஹி.....சமாளிக்க வுட மாட்டங்கறீங்க....

ஈரோடு கதிர் said...

தலைவரே.... இது புரமோசன்

க்கும்.... நானும்தான் எழுதறேன்..

எப்போதான் உங்கள மாதிரி எழுதுவேனே தெரியல...

பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

பக்கத்தூரு வந்துடலாம், வெளியூரும் வந்துடலாம்
பதிவர்களின் சந்திப்புக்கு சின்னக்கண்ணு
பகிர்ந்துக்கலாம் குலாவிக்கலாம் செல்லக்கண்ணு...

பக்கத்தூரு வந்துடலாம், வெளியூரும் வந்துடலாம்
பதிவர்களின் சந்திப்புக்கு சின்னக்கண்ணு
பகிர்ந்துக்கலாம் குலாவிக்கலாம் செல்லக்கண்ணு...

வெளிநாட்டில் இருப்பதால....

வெளிநாட்டில் இருப்பதால வந்து சேர முடியவில்ல
வெளிநாட்டில் இருப்பதால

நல்லா நடத்தி கலக்கிபோடு ஆருர்கண்ணு

நண்பர் உதவியெல்லாம் கிடைத்துடுங்க செல்லக்கண்ணு

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கல் பிரபு......

உங்கள் தொலைபேசி அழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களும்,அன்பும், புத்துணர்வை தருகிறது.

வெற்றிகரமாக நடத்தி முடித்து இது குறித்த பதிவு ஒன்றையும் கதிர் உதவியுடன் வெளியிடுவோம்.

அன்புடன்
ஆரூரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர் பக்கத்துலதான் இருக்கறன். வந்து நாலு அடி அடிக்கறதுன்னா அடிச்சிடுங்க.....

சிவாஜி said...

பாட்டாவே பாடிட்டிங்களா! கலந்துக்குவோம் நண்பரே... :)

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சிவாஜி

வால்பையன் said...

நண்பர்களை சந்திக்கும் ஆவலில் நானும் இருக்கேன்!

cheena (சீனா) said...

அன்பின் ஆரூரன் விசுவநாதன்

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி சீனா

Anonymous said...

நான் ஈரோட்டுல இருக்கும்போது இது மாதிரி ஒரு சந்திப்பும் நடக்கலை. :)

சந்திப்பு களைகட்ட வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

அதற்கென்ன அம்மிணி....அடுத்த முறை நீங்கள் வரும்போது ஒரு சந்திப்பை நடத்தி விடலாம்.

அன்பிற்கு நன்றி