Monday, December 07, 2009

வாருங்கள்................வளர்வோம்








உருகிட உணர்வா இல்லை
ஓதிட தமிழா இல்லை.
பருகிட நீரா இல்லை
பார்த்திட கண்ணா இல்லை
பெருகிட வளமா இல்லை
பேணிட பணமா இல்லை
வருகிற சொல்லா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை

படித்திட நூலா இல்லை
பகர்ந்திட பொருளா இல்லை
நடித்திடக் கலையா இல்லை
நாடகத் தமிழா இல்லை
துடித்திட ஆளா இல்லை
சுவைத்திடச் சுவையா இல்லை
வடித்திடக் கவியா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை
                                                           நன்றி:
                                                 கவிஞர்.இரா.துரைசாமி
                                                        ( பழத்தோட்டம்) 


 வளரும் மனத்தோடு.....வாருங்கள் ஈரோட்டுக்கு

20/12/2009 ஞாயிறு மாலை 4 மணியளவில்




தொடர்புக்கு:

பாலாசி:90037-05598

18 comments :

S.A. நவாஸுதீன் said...

பதிவர் சந்திப்பு வாழ்த்துக்கள் நண்பா.

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு நன்றி நவாஸ்.........

ஈரோடு கதிர் said...

அட இரண்டாவது நினைவூட்டலா...!!

அருமையான கவிதையோடு

கலகலப்ரியா said...

கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்......

மறப்பது மானுட இயல்பு
நினைவூட்டுதல் என் கடமை......

ஆரூரன் விசுவநாதன் said...

//கலகலப்ரியா//


கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))


யக்காவ்........நெசந்தான......

Anonymous said...

பதிவர் சந்திப்பு கலக்கலாக அமைய வாழ்த்துக்கள்

ஹேமா said...

எங்கே உங்களை ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே !

க.பாலாசி said...

மீண்டும் நன்றி அய்யா....சந்திப்போம்...

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//கலகலப்ரியா//


கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))


யக்காவ்........நெசந்தான//

:(... ippo kelambinaa next yr thaan.. =))

vasu balaji said...

அசத்துங்க சாமியோ.கவிதை அருமை.

வால்பையன் said...

ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!//

நேத்து போர்டு மீட்டிங்கிள் எடுத்த முடிவுங்களா...

ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்லை....!!!

ஆரூரன் விசுவநாதன் said...

//வால் பையன்//

ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!


அய்யோ சாமி....நா வரலை....

ஆரூரன் விசுவநாதன் said...

ஈரோடு கதிர்//

//வால்பையன் said...
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!//

நேத்து போர்டு மீட்டிங்கிள் எடுத்த முடிவுங்களா...

ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்லை....!!!


வாய்யா.....வா......எங்க போனீரு இவ்வளவு நேரம்......

ஆனாலும் ஆகது கதிர் இந்த கொலவெறி...

தனியா சிக்க வுட்டுட்டு....நக்கல்....

இருடியேய்......சிக்காமயா போயிடுவ எங்கிட்ட..

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே....

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ஹேமா....... வேலைப் பளு....

அன்பிற்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி//

//மீண்டும் நன்றி அய்யா....சந்திப்போம்...//

நீங்களுமா பாலாசி.....?