Friday, December 11, 2009

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா............










                            பாரதி பிறந்த நாள்



மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் லுறுதி வேண்டும்
பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானக மிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.



பாரதியின் குடும்பம்





 


தமிழரின் உயிர் நிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்கு தகும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில், இந்த நாட்டினை
கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடுகமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படறும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் நெருப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

                                                   பாவேந்தன் பாரதி தாசன்.

பாட்டுக்கொரு புலவன்  - பாரதி
அவன் பிறந்த நாளை நினைவு கூர்வோம்

.

54 comments :

ஈரோடு கதிர் said...

//அவன் பிறந்த நாளை நினைவு கூர்வோம்//

அதையாவது செய்வோம்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கதிர்.....

க.பாலாசி said...

அரிய புகைப்படங்களையும் செய்திகளையும் பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள்...

க.பாலாசி said...

//பாட்டுக்கொரு புலவன் - பாரதி
அவன் பிறந்த நாளை நினைவு கூர்வோம்//

நிச்சயம்...நினைவில் நிறுத்துவோம்...

vasu balaji said...

அரிய படங்கள் ஆரூரன். பகிர்ந்தமைக்கு நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாசி

கலகலப்ரியா said...

:D:D:D:D ... vanthu padichukkaren..

ஹேமா said...

கிடைத்தற்கரிய படங்கள்.நன்றி ஆரூரன்.
வாழ்த்துவோம்.நினைவில் நிறுத்துவோம்
மீசைக் கவியை.

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
:D:D:D:D ... vanthu padichukkaren..
//

எங்கே ஈரோடு வந்தா!!!

எப்ப பார்த்தாலும் இப்படியே எஸ்கேப் ஆகறது நல்லாயில்லைங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ப்ரியா.....

//கதிர்//
எங்கே ஈரோடு வந்தா!!!

எப்ப பார்த்தாலும் இப்படியே எஸ்கேப் ஆகறது நல்லாயில்லைங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஆமாங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ஹேமா....

அன்புடன் நான் said...

காணகிடைக்காத நிழற்படத்துடன்... நல்ல பதிவுங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி நண்பர் கருணாகரசு....

வால்பையன் said...

இதே ஒரு நடிகர் பிறந்த நாள்னா ஊரே
அல்லோல கல்லோலப் படும்!

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ப்ரியா.....

//கதிர்//
எங்கே ஈரோடு வந்தா!!!

எப்ப பார்த்தாலும் இப்படியே எஸ்கேப் ஆகறது நல்லாயில்லைங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஆமாங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

மவனே கதிரு நாம பின்னூட்டம்னாலும் சரி.. ஒட்டுன்னாலும் சரி சொன்னா வந்து போட்டுட்டுதான் போவோம்...! சும்மா... அப்புறம் வரோம்னு சொல்லிட்டு போற ஆளு நாம இல்லிங்கோ...! அது கூடப் பரவால்ல... புரியல மெதுவா எஸ்கேப் ஆய்டலாம்னு நகத்த கடிச்சு துப்பிக்கிட்டு... மெட்ராஸ்கு போன் பண்ற ஆளும் நாம இல்லீங்கோ..! சும்மா வெட்டு ஒண்ணு துண்டு மூணா பேசுவோம்ல..! கதிரும் ஆரூரும் எதிரும் புதிருமா இருந்து இப்போ குதிருக்குள்ள இருந்து வெளில வாறியளோ...! ஆரூரு கதிர நம்பி உசிர விட்டுடாதீய... சொல்லிப்டேன்..! (சும்மா அதிருதில்ல..)

ஈரோடு கதிர் said...

//ஒட்டுன்னாலும் //

ஆத்தாடி
ஓ....ட்டுப்பொடறதில்லையோ

ஒட்டிட்டுதான் போறிகளோ...

காணாம போயிட்டு லொள்ளப்பாரேன்

ஈரோடு கதிர் said...

//சும்மா வெட்டு ஒண்ணு துண்டு மூணா பேசுவோம்ல..! //

அடப்பாவிகளா விரலையும் கூட வச்சு வெட்டிக்குவீங்களோ!!!!

ஈரோடு கதிர் said...

//(சும்மா அதிருதில்ல..)//

க்க்க்க்கும்........ இது ஒன்னுதான் கொறச்சல்

சும்மா வடிவேலு கணக்கா சவுண்டு...

ஆரூரன் விசுவநாதன் said...

என்ன இருந்தாலும் கதிரு எங்க ஊர்க்காரரு அம்மிணி.....

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாதில்ல....

ஆரூரன் விசுவநாதன் said...

எப்ப அம்மிணி நானும் கதிரும் எதிரும் புதிருமாயிருந்தோம்......?

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//ஒட்டுன்னாலும் //

ஆத்தாடி
ஓ....ட்டுப்பொடறதில்லையோ

ஒட்டிட்டுதான் போறிகளோ...

காணாம போயிட்டு லொள்ளப்பாரேன்//
இவுக மட்டும் போடறதுக்கு 'பொடரலாம்.'... நாம ஓட்டுக்கு பதில ஒட்டகம் ச்சே... ஒட்டுப் போடக் கூடாதோ...! சொல்லுற ஆளப் பாரு.. பெரிய தமிழ் வித்துவான்..!

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//சும்மா வெட்டு ஒண்ணு துண்டு மூணா பேசுவோம்ல..! //

அடப்பாவிகளா விரலையும் கூட வச்சு வெட்டிக்குவீங்களோ!!!!//

அது சொல்ல முடியாது... கழுத்தில போடறச்சே... காதில ஒரு வெட்டும் விழலாமில்ல...

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனை பேரு கிளம்பிருக்கிறீங்க.....இப்படி போட்டு குடுக்க.....

அம்மிணி இதெல்லாம் நாயமில்லீங்க......

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//(சும்மா அதிருதில்ல..)//

க்க்க்க்கும்........ இது ஒன்னுதான் கொறச்சல்

சும்மா வடிவேலு கணக்கா சவுண்டு...//

இது யாருன்னு தெரியும்டி..

vasu balaji said...

குட் ஃபைட். வெரி இன்ரெஸிங்=))

ஈரோடு கதிர் said...

//'பொடரலாம்.'//

'பொடரலாம்.'இல்ல பொடறலாம்

அய்யோ... அய்ய்ய்ய்ய்ய்யோ

தப்புலகூட... தப்புத் தப்பாவா...

பாரதி எங்கள் இந்த பாப்பகிட்ட இருந்து காப்பாத்து

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

என்ன இருந்தாலும் கதிரு எங்க ஊர்க்காரரு அம்மிணி.....

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாதில்ல....//

பாரதி பிறந்தநாள்ல வந்து சண்டைக்கு இழுக்கிறாங்கன்னு ஒரு நாயம் வேணாம்...? ஊர்க்காரனுவன்னு அநியாயம் பக்கம் போகலாமா ஆரூர்... ஈரோட்டுக்கே இது அவமானமில்லையா... (கதிரு பிறந்தநாள் அன்னிக்கு ஈரோட்டுக்கே வந்து சண்டை போடுறேன்...)

vasu balaji said...

எங்கள்=எங்கள
பாப்ப=பாப்பா

ஈரோடு கதிர் said...

//பாப்பகிட்ட //


கால் இல்லையேனு...

இதுக்கு வந்து மொக்கக் கூடாது..

சின்ன குழந்தை... சிம்பாளிக்கா

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

எப்ப அம்மிணி நானும் கதிரும் எதிரும் புதிருமாயிருந்தோம்......?//

ஆரூர்... அந்த கதைய ஏன் கேக்குறீங்க... உங்கள போக விட்டு பின்னாடி கதிரு கூப்டு கூப்டு திட்டினத நான் என் வாயால எப்புடி சொல்லுவேன்.. (அதுதான் டைப் பண்ணுறேன்..)... அந்தக் கொடுமைய என்னோட இடுகைல போய்ப் பாருங்கோ... =))

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனை பேரு கிளம்பிருக்கிறீங்க.....இப்படி போட்டு குடுக்க.....

அம்மிணி இதெல்லாம் நாயமில்லீங்க......//

நல்லதுக்கு காலமில்லப்பு....

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

குட் ஃபைட். வெரி இன்ரெஸிங்=))//

madrasla irunthu audience verayaa... velangidum

ஈரோடு கதிர் said...

//அந்தக் கொடுமைய என்னோட இடுகைல போய்ப் பாருங்கோ... =))//


அடப்பாவிகளா... இப்படியெல்லாம்தான் நுனிக்கரும்ப கடிக்க விடறதா...

செமையா மார்க்கெட் பண்றீங்க

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//'பொடரலாம்.'//

'பொடரலாம்.'இல்ல பொடறலாம்

அய்யோ... அய்ய்ய்ய்ய்ய்யோ

தப்புலகூட... தப்புத் தப்பாவா...

பாரதி எங்கள் இந்த பாப்பகிட்ட இருந்து காப்பாத்து//

ஆமாம்.... அவரு பர்த்டே பார்ட்டில பிசியா இருப்பாரு... இங்க சண்டைக்கு நடுவர் வேல பாக்கத்தான் வரப்போறாரு...

வால்பையன் said...

@ கதிர்

இங்க மட்டும் கும்மி அடிக்கிறிங்க, இன்னைக்கு எதாவது ஸ்பெஷல் அக்கேஷனா?

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...

இது யாருன்னு தெரியும்டி..//

அல்ல்ல்ல்ல்லோவ்...

எங்களுக்கும் முடி கம்மிதான்...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//அந்தக் கொடுமைய என்னோட இடுகைல போய்ப் பாருங்கோ... =))//


அடப்பாவிகளா... இப்படியெல்லாம்தான் நுனிக்கரும்ப கடிக்க விடறதா...

செமையா மார்க்கெட் பண்றீங்க//

பாருங்க ஆரூர்... நான் சொன்னா நீங்க நம்பல..! என்னமோ அவங்க கரும்புத் தோட்டத்ல.. மாட்ட அவுத்து விட்ட மாதிரி இல்ல... உங்கள சொல்லுறாங்க...அவ்வ்வ்வ்.... நீங்க எவ்ளோ நல்லவரு ஆரூரு... உங்கள போயி... :(

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
பாருங்க ஆரூர்... நான் சொன்னா நீங்க நம்பல..! என்னமோ அவங்க கரும்புத் தோட்டத்ல.. மாட்ட அவுத்து விட்ட மாதிரி இல்ல... உங்கள சொல்லுறாங்க...அவ்வ்வ்வ்.... நீங்க எவ்ளோ நல்லவரு ஆரூரு... உங்கள போயி... :(//

மாடா... !!!!!

மவளே இரு பாலாசிகிட்ட சொல்லி
கவிதை எழுதச்சொல்றேன்

நுனிக்கரும்புக்கு ’அடி’க் கரும்ம்ம்ம்ம்ம்ம்புனு

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...

இது யாருன்னு தெரியும்டி..//

அல்ல்ல்ல்ல்லோவ்...

எங்களுக்கும் முடி கம்மிதான்...//

இப்போ என்ன.... முடி கம்மி.. முடி கம்மின்னு கூவிக் கூவி சொல்லுறாய்ங்களே... இதில பெருமைப்படுற மாதிரி என்ன இருக்குன்னு... ஈரோடு வாசிங்கதான் சொல்லணும்...

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
@ கதிர்
இங்க மட்டும் கும்மி அடிக்கிறிங்க, இன்னைக்கு எதாவது ஸ்பெஷல் அக்கேஷனா?//

இன்னும் இல்லீங்க....
செட்டு சேர்ந்தா...
ஒன்பது மணிக்கு மேலதான்

கலகலப்ரியா said...

//எதாவது ஸ்பெஷல் அக்கேஷனா?//

ஆமாங்க.,.. பாரதியார் பிறந்தநாள் நினைவா... அவரு எழுதின குயில்ப் பாட்டுக்கு கும்மி அடிக்கிறதா அரேஞ்சுமென்டு

ஆரூரன் விசுவநாதன் said...

//பாரதி பிறந்தநாள்ல வந்து சண்டைக்கு இழுக்கிறாங்கன்னு ஒரு நாயம் வேணாம்...? ஊர்க்காரனுவன்னு அநியாயம் பக்கம் போகலாமா ஆரூர்... ஈரோட்டுக்கே இது அவமானமில்லையா...//

கதிரு நான் ஆட்டத்துக்கு வல்ல.....அம்மிணி கத்திய கீழ போட்டப்பறம் சண்ட போடக்கூடாதில்ல

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
பாருங்க ஆரூர்... நான் சொன்னா நீங்க நம்பல..! என்னமோ அவங்க கரும்புத் தோட்டத்ல.. மாட்ட அவுத்து விட்ட மாதிரி இல்ல... உங்கள சொல்லுறாங்க...அவ்வ்வ்வ்.... நீங்க எவ்ளோ நல்லவரு ஆரூரு... உங்கள போயி... :(//

மாடா... !!!!!

மவளே இரு பாலாசிகிட்ட சொல்லி
கவிதை எழுதச்சொல்றேன்

நுனிக்கரும்புக்கு ’அடி’க் கரும்ம்ம்ம்ம்ம்ம்புனு//

சொல்லுறதையும் சொல்லிட்டு... மாடான்னு ஆச்சரியக் குறி வேறயா.... இதில என்னை வேற அடியா.... கவிதை எழுதறதுக்கு ஆளு வேறயா.... (இட்லி ஆவிலயும் பாலாசி ஆவிதான் ஒட்டி இருக்கோ..)

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//பாரதி பிறந்தநாள்ல வந்து சண்டைக்கு இழுக்கிறாங்கன்னு ஒரு நாயம் வேணாம்...? ஊர்க்காரனுவன்னு அநியாயம் பக்கம் போகலாமா ஆரூர்... ஈரோட்டுக்கே இது அவமானமில்லையா...//

கதிரு நான் ஆட்டத்துக்கு வல்ல.....அம்மிணி கத்திய கீழ போட்டப்பறம் சண்ட போடக்கூடாதில்ல//

அச்சச்சோ.... நான் கத்திய தூக்கவே இல்லீங்களே ஆரூர்..! கதிர்தான் தற்பாதுகாப்புக்கு கேடயமா உங்கள யூஸ் பண்ண பார்க்கறாங்க.. நீங்க புத்திசாலி...தப்பிச்சிட்டீங்கல்ல

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

பிரியா... போதும்...

பாரதி பாவம்..

நாம நெக்ஸ்ட்... சயிண்டிஸ்ட் பேஜ்ல மீட் பண்ணுவோம்..

அங்க காத்து வாங்குது

அரூரன் அண்ணாச்சி இந்த பொண்ணு பேச்சையெல்லாம் டெலிட் பண்ணிடுங்க.... போனா போவுது என் பேச்சையும்//

அது... கதிருக்கு அழகு...! பாரதி பிறந்தநாள்ல நோ சண்டை..! சயன்டிஸ்ட் பக்கத்துக்கு வீட்ல வந்து கும்மி பாடலாம் சாமியோ...!

கலகலப்ரியா said...

அருமையான படங்கள் ஆரூர்..! நான் வீட்டுக்கு வந்து பாரதி பத்தி எழுதனும்னு நினைச்சேன்... நீங்க முந்திக்கிட்டீங்க... ரொம்ப நல்லாருக்கு..! ஓட்டு போட்டுட்டு எஸ்கேப்..! கும்மிக்கு மன்னிக்கணும்..!

கலகலப்ரியா said...

(noway... tamilmanam sothappal... ithuthaan appave appuramnu sonnen.. avvv... veetlathaan... vottu..)

அகல்விளக்கு said...

அருமையான பகிர்வு நண்பரே...

ஒரு முறை பாரதி கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட போது மூன்றாம் பரிசு கிடைத்ததாம். அப்போது பாரதி சொன்னாராம் என் கவிதைகள் மைல்கற்கள் என்று. இன்றோ அதே போல் கவிதையுலகை பாரதிக்கு முன்பு, பாரதிக்கு பின்பு என வகுத்துக் கூறுகிறோம்.

பாரதியின் அரிய புகைப்படங்களுக்கு நன்றி...

கலகலப்ரியா said...

voted...=))

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி அகல் விளக்கு

நன்றி ப்ரியா

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப சந்தோசம் நண்பா. பாரதியை நினைவுகூர்ந்ததோடு நல்ல பகிர்வும் தந்ததற்கு.

அன்புடன் மலிக்கா said...

பாரதியே நீ கவிபாடியதின் தாக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.உன்னளவு முடியவே முடியாது. என்னாலானவைகளை முயற்ச்சிக்கிறேன்,

நல்லதொரு இடுகை பாராட்டுக்கள்..

http://niroodai.blogspot.com