Tuesday, September 29, 2009

காமத்துப் பால்......



சூரிய வெளிச்சம் அறை முழுதும் பரவத்தொடங்கியது.  படுக்கையறையை விட்டு மெல்ல வெளியே வந்து,  நீண்ட அணைப்பின் சுகத்திலிருந்து மீள மறுக்கின்ற இமைகளை கைகளால் அழுத்தித் தேய்த்து, பிரிக்கின்ற முயற்சியில், பால்கனியின் நடுவில் நான்.........

காலைக் கருக்கெழுந்து
கருஞ்சாந்து பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார் கூந்தல் பின்னலிட்டு
காத்திருந்தேன் உம் வரவை….காத்திருந்தேன் உம் வரவைஎன்பதைப்போல்,

கைகள் வாசலில் கோலமிட, விழிகள் என் மீது கோலமிட, மெலிதாய் எனைப்பார்த்துச் சிரித்தாள், எதிர்வீட்டுச் சித்ரா

இயல்பாய் சிரித்துத் திரும்ப…………..

தொன்னூரைத் தொடவிருக்கும் எடையையும்(கி.கி), ஐம்பதைத் தொடவிருக்கும் இடையையும்(இன்ச்), நாற்பதைத்தொடவிருக்கும் (வயதையும்) குறைக்க, கஜினி முகமதாய், முயற்சி செய்யும் பக்கத்து வீட்டுமாமி.வனிதா 

வாக்கிங் முடித்துத் திரும்பும் வழியில், வாய் முழுதும் பற்களாய்,  , “குட்மார்னிங்” சொல்ல, பதிலுக்கு நானும் சொல்லி முடிக்கையில்…………….


கல்லூரிப் படிப்பை முடித்து, 
வாழ்க்கையை படிக்கபோகும் ஆர்வத்தோடு, 
புத்தம்புது மலராய் பூத்துக் குலுங்கும் அழகோடு, 
கண்களைச் சுறுக்கிக் கெஞ்சும் விழிகளோடு, 
இதழ்கள் விரிய , தெற்றுப்பல் சிரிப்போடும் 
நான் வாங்கும் காலைப்பத்திரிக்கையோடும்,..........

கீழ் வீட்டுப்பெண்……வித்யா……..ஹாய்.ஜஸ்ட் அ மினிட்.(ஹும்.........குடுத்து வச்ச பேப்பர்) 



 இட்ஸ் ஒகேகோஅஹெட்என்று சிரித்துக் கொண்டே, இயல்பாய் திரும்புகையில்……


இறுக்கத்தோடு……இனியா……….என் இல்லாள், இனியாள்,..
(சரீடி..நிறுத்து..இனி நீ தனியாள் தாண்டிஉண்டு இன்னைக்கு உனக்கு..உள்ளே ஏதோ ஒரு பட்சி சொன்னது)


காலங்காத்தால………………… என்ன?...... ம்ம்ம்......எல்லாத்துக்கும் தர்ம தரிசனம் குடுத்தாச்சா?...........ஊர்ல இருக்கிறவளுகலெல்லாம் பார்க்கறதுக்கா நா.கட்டிகிட்டு வந்தேன்.. .எவளப்பார்த்தாலும் இதே தொல்ல…….

பொறுக்கி……பொறுக்கி.ராத்திரிக்கு கொணச்சுகிட்டு வந்தே……? பார்த்துக்கோ……

இனி நீ வேற பெட்…… நான் வேற பெட்………எவளெவளயெல்லாம் பார்த்து கிட்டிருந்தயோ..அவளயெல்லாம் கூப்டுக்கோ……….


அடக் கடவுளே………ஒரு..இல்ல.இல்ல………மூணு சின்ன சிரிப்புக்கு,  இத்தா பெரிய  தண்டனையா?..... ஒருத்தர் சிரிக்க..பதிலுக்கு நாம் சிரிக்க……..இத யாருகிட்டப் போய் சொல்லுவேன்..? என்னன்னு சொல்லுவேன்.........?



ஹலோ ஒரு நிமிஷம்..வெயிட்....வெயிட்.......இது என்னோட அனுபவமோ?  புலம்பலோ  இல்லைங்க……


திருவள்ளுவரோடதுஅதாங்க.தாடி வச்சு கையில ஏடெல்லாம் வச்சிருப்பாரே…….அதாங்க…….. இன்னும் புரியலையா?   திருக்குறள் எழுதினாரே அவருது தாங்க……..


 பெண் இயலார் எல்லோரும் கண்ணின் பொது உண்பர்
 நண்ணேன் பரத்த நின் மார்பு-திருக்குறள். அ:132:1311


டிஸ்கி

இதில் தவறேதுமிருந்தால் அது திருவள்ளுவருடையது....அல்லது. உரை எழுதிய  மு.வ. வுடையது.
திரைக்கதை...மட்டும் என்னுது.......


ஒழுங்கா ஓட்டுப் போட்டுட்டு......பின்னூட்டமும் எழுதீருங்க....


 இல்ல ........தினம் ஒரு குறள் ரேஞ்சுக்கு ஒரு ட்ரை......... பண்ணி கொன்னுடுவேன்.........


Sunday, September 27, 2009

ஹலோ........எங்களத் தெரியுதா?

"சொல்லின் செல்வர் சம்பத்"




E.V.K.சம்பத் அவர்தம் துணைவியார் திருமதி சுலோச்சனா சம்பத் தந்தை பெரியாருடன்


 நாமக்கல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக அவைத்தலைவர் திருமதி.சுலோச்சனா சம்பத்  கணவரும், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தந்தையும், தந்தை பெரியாரின் சகோதரர்  ஈ.வெ.கிருட்டிணசாமியின் மகனுமான  திரு.E.V.K சம்பத்.

திமுக வின் பிரச்சார பீரங்கி என பெயர் பெற்றவர்.  "சொல்லின் செல்வர் சம்பத்" என்று புகழப் பெற்றவர்.  இவரின் பாராளுமன்ற பேச்சுக்கள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமானவை.  முன்னாள் பிரதமர் இந்திராவின் கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளாராக இருந்தவர்.

தமிழர்கள் நலனும், தமிழ் மொழியும் காப்பாற்றப்படும் என்று, பிரதமர் நேரு எழுத்துப்பூர்வ உறுதியளித்தது கடிதம் எழுதியிருந்தது   இவரின் பெருமைக்கு சாட்சியம்.











ஈரோட்டில் அவரது சிலை...........சிவப்பு மையில் வட்டமிடப்பட்டுள்ளது.

                          --------------------------------------------------
அறிஞர் அண்ணா


.முத்தமிழறிஞர். வாழும் வள்ளுவர்,டாக்டர். கலைஞருக்கு காஞ்சியில் நேற்று விழா எடுக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.  அந்த விழா மேடையின் பின்புறத்தின்  இவர் படம் வைக்கப்பட்டிருந்ததை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்களுக்கு சிறப்புப் படம்.



அறிஞர் அண்ணா உருவம் சிவப்பு மையால் வட்டமிடப்பட்டுள்ளது.


வாழ்க திராவிடம்....வாழ்க பெரியாரியம்......
வாழ்க  முட்டாள் தொண்டர்கள்..
வாழ்க  அப்பாவி மடையர்கள்...ச்சீ....அப்பாவி மக்கள்







Saturday, September 26, 2009

நாணயம் இல்லாத மகாத்மா......

தொல்லைக் காட்சியை பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன.   நேற்று மாலை            "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"  சேனல்  ஒன்றை பார்த்தேன். அதில் அறிஞர் அண்ணா  விழா பற்றிய விளம்பரம் ஒன்று வந்தது. அதில் மத்திய அமைச்சர் ஒருவர்....மாமேதை.....பேசியது.....

"அண்ணா நாணயம் மிக்கவர்.  எனவே தான் அவர் படம்  நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது"

அப்படியென்றால் நோட்டில் இருக்கும் காந்தி நாணயம் இல்லாதவரா...?


மரமண்டை, கதர்ச்சட்டைகளும் கை தட்டுகிறது. 

ஜால்ரா அடிப்பதற்கு ஒரு அளவில்லை.....   சரி போய் தொலையட்டும்.....கதர்ச்சட்டைகளுக்காவது அறிவு வேண்டாம்.


தொங்க பாலுவுக்கும்,  வாச மூப்பனுக்கும் காவடி தூக்கவே நேரம் பத்தல

பெரியார் பேரனுக்கு மப்பு குறைஞ்சாத்தான.....




மானங்கெட்டவர்கள்.....


Friday, September 25, 2009

அப்படியே தந்துவிடு..........

அன்பிற்கினிய நண்பர் பா.ரா.
 http://karuvelanizhal.blogspot.com
ஒரு தேவதையை எனக்கு அனுப்பியிருக்கிறார்.






"வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்த போது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்".

 என்ற கவிஞர் மு.மேத்தாவின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 வரமாட்டாள், வந்தாலும் ஏதும் தரமாட்டாள், நம்பாதே, என்று சமீபத்தில் தான் ஒரு தோழிக்கு பின்னூட்டம் எழுதினேன்.  ஆனால் இவ்வளவு விரைவாக என்னிடமும் வருவாள் என்று எண்ணியிருக்கவில்லை.




பார்த்தாயா?......தேவதையே.......

எத்தனை ஆசைகள் இந்த மனிதர்களுக்கு?
வலைப்பூ நண்பர்கள் ஒவ்வொருவரும் இதுவரை கேட்டதை பார்க்கும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.


இழந்த நிமிடங்களை, இழந்தநாட்களை, இழந்த மனிதர்களை, இழந்த நட்புகளை, என்னும் எத்தனையெத்தனையோ....இழந்தவைகளை எல்லாம் கேட்டவர்கள் ஒருபுறமென்றால்............

இதுவரை காணாததை, கிடைக்காததை, ஏன் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதவைகளைக் கூட,  கேட்டவர்கள்...............  மறுபுறம்.


ங்கிருந்தோ  வரும் இந்த பாடல் வரிகளில் மூழ்குகின்றேன்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே  நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி
என்ற வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு (புத்தம் புது)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்

சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்

தேசத்தின் எல்லை கோடுகள்
அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே
வந்து வாழட்டும்


இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  என்னதான்  செய்வாய் நீ.....


பொன்னொத்த நிலவே நீ-நின்

கள்ளொத்த கனிவாயால்

வரமொன்று தர விழைந்தால்...

விரைந்திங்கே வந்துவிடு.


.
பாசம்நிறை நண்பரெல்லாம்
வாசமிகு வலைப்பூவில்
வரிசையாய் கேட்டுவிட்டார்....


அவர்- ஆசைப்பட்ட அத்தனையும்
அப்படியே தந்துவிடு......அப்படியே தந்துவிடு.


.






















Wednesday, September 23, 2009

பாயாசம், அப்பளம், வடை….


 மதியம் 2 மணி,  

அலுவலகத்திலிருந்து திரும்பி, மதிய உணவை ஒரு கை பார்த்து,  (பொதுவாகவே சாப்பிட, சாப்பிட தூங்க ஆரம்பிப்பவன்)  உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு ல்ல…….. 

வீட்டிலிருக்கும்  இரண்டு வாண்டுகளிடமிருந்து எப்படி தப்பிப்பதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது  தம்பியிடமிருந்து போன். அவன் வீட்டிற்கு வரச் சொல்லி

. சரி விதியார விட்டதுன்னு கிளம்பி போகும் போது,திடீரென்று ஒரு ஞாபகம், அன்று காலை, நா.கணேசன் அய்யா “ஈரோட்டில் பாரதி” என்ற இடுகையை படித்தேன்.  அதில்  பாரதி கடைசியாக பேசிய கூட்டம் பற்றி எழுதியிருந்தார்.

சரி, தம்பி வீட்டுக்கு பக்கத்தில் தான் அவர் குறிப்பிட்டுருந்த அந்த வாசக சாலை இருந்தது.  குடும்பத்தை தம்பி வீட்டில் செட்டில் செய்து விட்டு , பாரதி கடைசியாக பேசிய அந்த வாசகர் சாலைக்கு சென்றேன்.

நான் பள்ளியில் படித்த நாட்களில் அது இடிந்து சிதிலமாகி, பாழடைந்து கிடந்த அந்த கட்டிடம் முன்னாள் ஆட்சியர் முனைவர். உதயசந்திரன் முயற்சியால் புதுப் பொழிவுடன் காணப்பட்டது.

வெளியில் ரோட்டிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்த போது, 

உள்ளிருந்து வந்த ஒரு பெண்மனி, என்னை அழைத்து எதற்காக படமெடுக்கிறீர்கள்? என்றார்.    

காலையிலிருந்து நடந்ததைச் சொன்னவுடன், அருகிலிருந்த ஒருவரை அழைத்து இவருக்கு சுற்றிக்காட்டுங்கள். என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.  

 உடன் வந்தவரும் எல்லா அறைகளையும் சுற்றிக்காட்டிவிட்டு படங்கள் எடுக்க உதவியும் செய்தது மகிழ்சியாக இருந்தது.

நான் அவரோடு பேசிக்கொண்டிருந்த போது இந்த புகைப்படங்களை பிளாக்கில் இடுப்போவதாக சொன்ன போது அருகிலிருந்த

ஒரு திருவாளர் பொதுஜனம் மெதுவாகக் கேட்டார்: ஏன் சார்  ஏம் போட்டாவும் வரும்ல........எந்த பேப்பர் சார் நீங்க...... கொஞ்சம் பார்த்து கலர்ல போடுங்க சார்......நானே கொஞ்சம் கருப்பு..........
                                 
                                 ----------------------------------




நேற்றுமாலை பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக என் இளைய மகன் ..வயது-5

அப்பு...பப்பு…………..அப்பு.பப்பு……….

(அன்பு அதிகமானால் அல்லது என்னால் ஏதும் ஆகவேண்டியிருந்தால் அவன் இப்படி அழைப்பது வழக்கம்.)


என்னப்பா?

ஒரு முக்கியமான விசயம…………….

ம்

அம்மாகிட்ட சொல்லக்கூடாது……….


சரி சொல்லு……


மெதுவா கிட்ட வந்து……….குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னப்பா?

இல்லப்பா…….அதுவந்து……..வந்து…………
(பத்தாங்கிளாஸ் பரிட்சையில கூட நான் அப்படி முழிச்சதில்ல…)…

இடையில் பெரியவன்(வயது:8) டேய்..இதெல்லாம் அப்பாகிட்ட  கேக்கக்கூடாதுன்னு சொன்னன்ல..)


சொல்லுங்க.......அப்பு....பப்பு................



இல்லப்பா……அதுவந்து………..ஊருல ஏற்கனேவே மனுசங்க அதிகமாக இருக்கிறாங்க, எல்லாத்துக்கும், குடி தண்ணீர், போக்குவரத்து, பள்ளிக்கூடம், இதயெல்லாம் குடுக்கமுடியாதுல்ல


அதனால…….

அதனால, அரசாங்கம்,   இனிமே குடும்பத்த கட்டுப்பாட்டோட வச்சுக்குங்க……..அதிகமா குழந்தைகளை பெத்துக்காதீங்கன்னு சொல்லுதுப்பா..

இதயேம்பா நம்மகிட்ட சொல்லுறாங்க……சாமிகிட்டயில்ல சொல்லோனும்……..

எது………….சாமிகிட்டயா?

ஆமாப்பா……அவருதான நம்மளயெல்லாம் படச்சாரு?

அய்யோ…….சாமி…….இத யாருகிட்ட போய் சொல்லுவேன்……..

கருமாந்தரம் புடிச்ச பயலுக, டீ.வி ல  இந்த  விளம்பரத்த  போட்டு என்ன கொலைகாரனாக்கப் போறாங்க……இவனுங்க இன்னும் என்னென்ன கேப்பானுங்களோ..

                                   ---------------------------------



நாமக்கல்லில் உறவினர் இல்லத் திருமணம்.   வீட்டில் அம்மா,மனைவி, குழந்தைகள் அனைவரும் முதல்நாளே சென்று விட்டிருந்தனர்.  காலையில் எழுந்து குளித்து, 7 மணியளவில் பேருந்தைப் பிடித்தேன்.  ஈரோட்டிலிருந்து நாமக்கல்,திருச்சி வழியாக தஞ்சை செல்லும் பஸ் அது. பஸ்ஸின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன.  ஓட்டுனருக்கு பின் இருக்கையில் ஒரு காலியிடமும், அதன் எதிர்புறம் ஒரு இரண்டும்  மட்டுமே காலியாக இருந்தது.

 காலியாக இருந்த இரண்டிடத்தில் அமரபோகும் போது வந்த, ஒரு இளவட்ட  தள்ளுநர்  என்னிடம்  :”சார், அதுல ஆள் வராங்க,  சீட் போட்டிருக்கு” என்றார். சரி என்று ஓட்டுனரின் பின் இருக்கையில் அமர்ந்தேன்.


பஸ் ஸ்டேண்டிலிருந்து  கிளம்பிய உடன், கண்டக்டர்  செல்லுக்கு ஒரு மிஸ்டு கால்.  அவரும் மீண்டும் அந்த மிஸ்டு கால கூப்பிட்டு, 


 வந்தாச்சாட?....
……………………..

பஸ் ஸ்டேண்டுல இருந்து கிளம்பிட்டோம்.. நம்ம வண்டிய பார்த்தா கை காட்டு,..என்ன……. டிரைவருக்கு தெரியாது.


ஒ . கே……வா. ன்னு சொல்லிட்டு ,


டிரைவர் கிட்ட போய்

எங்கயும் நிறுத்த வேண்டாம் நேராப் போயிடலாம்

டிரைவர்: பள்ளிபாளையத்தில டைமர் கிட்ட கையெழுத்து?

கண்டக்டர்:   வாங்கிக்கலாம்,.வாங்கிக்கலாம்………

டிரைவர்:அப்புறம்.

வழியில நம்மாளு   ஹவுசிங் போர்டுகிட்ட நின்னு கை காமிப்பாஅப்புடியே நிறுத்தி ஏத்திக்குங்க……
(அடங்கொய்யாலே……..அதுக்குத்தான் ரெண்டு சீட் ப்ளாக் பண்ணிருக்கானா.)



இதற்கிடையில் காவிரி ஆற்றின் பாலத்திற்கு அருகில் வரும் போது அவரின்  பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் கோளாரு ஏற்பட   தடுமாறிப்போனார். பள்ளிபாளையம் டிப்போ முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று மெசின் மாற்றி வேறு ஒன்றை எடுத்துவந்தார்.  அதற்குள் 15 நிமிடம் காலி. பஸ்ஸிலிருந்த பயணிகள் கொதித்திழுந்து லேட்டாகி விட்டதென்று சத்தம் போட்டனர்.  இடையில் இவர் செல்போன் வேறு விடாது அடிக்கத் தொடங்கியது.


போனை எடுத்து……


வைடா…….வைடா.வந்தர்றேன்……ஒரு சின்ன பிரச்சனை……

…………….

வந்தர்ரேன்……வந்தர்ரேன்……..ஒரு சின்ன பிரச்சனைதான், சரியாயிடுச்சு……வந்தர்றேன்.


போனை கட் பண்ண,   மீண்டும் அடிக்கிறது..


போனை எடுத்து..


ஹாலோ..
………………..

ஒன்னுமில்ல..வந்து சொல்லறன்..

…………….

பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல……சின்ன பிரச்சனைதான்…………

…………………

அதற்குள் பயணிகள் அனைவரும் சத்தம் போட.போனை கட் செய்துவிட்டு.


டிரைவரிடம்.அண்ணே.கொஞ்சம் நிறுத்தாம ஓட்டுங்க…… லேட்டாயிருச்சு..


டிரைவர்: ஏன் உன் ஆளு வெயிட் பண்ணாதாம?.... வேற வண்டில போகச் சொல்லு.


இவர்: என்னண்ணே,,, கோச்சுக்கிறீங்க…….பாஸஞ்சர்ஸ் கத்தராங்கல்ல…….



டிக்கட் கொடுக்கத்தொடங்கிய அவரின் பாதிகவனம், டிக்கட் கொடுப்பதில், பாதிக்கவனம் வழியில் டிரைவர் வண்டியை நிறுத்தி தன் ஆளை ஏற்றாமல் விட்டுவிடுவாரோ? என்பதில்.


10ரூபாய் கொடுத்து 7ரூபாய் டிக்கெட் வாங்கியவருக்கு 43ரூபாய் மீதம் கொடுத்தார். 50ரூ கொடுத்து 7 ரூ டிக்கட் வாங்கியவருக்கு 3ரூ மீதி கொடுத்தார். எப்படித்தான் கணக்கு முடித்தாரோ..

5 கி.மீ பயணத்திற்குள் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்திருந்தார்.



ஒரு சிறு சந்திப்பில்,  ஒரு இளம் பெண் இடுப்பில் ஒரு குழந்தையுடன், பஸ்ஸை நிறுத்துமாறு,  கையைக் காட்டினார்.  டிரைவர் வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்துப்போகும்போது……


கண்டக்டர்:
அண்ணாஅண்ணா…….அதில்லங்கண்ணா..போலாங்கண்ணா……நம்மாளு இன்னும் கொஞ்சம் கலரா இருப்பாண்ணா……இது கைல கொழந்த வேற…….இதில்லண்ணா

 (வண்டியின் முன்பகுதியிலிருந்த அனைவருக்கும் வரப்போகும் பெண்ணைப் பார்க்கும் ஆர்வம் கூடத் தொடங்கியது..)



டிரைவர்: 
டேய்……நாசமாப்போறவனே…….நீ வந்து வண்டியோட்றா……இழவு டிக்கட்ட, நான் குடுத்துக்கறன்………


 கண்டக்டர்:
 இல்லைங்கண்ணா…….கோவிச்சுக்காதீங்கண்ணா……சாரிங்கண்ணா…….



ஒருவழியா ஒரு பஸ் நிறுத்ததிலிருந்து ஒரு பெண் கை காட்ட……வண்டியை நிறுத்தி சிலரை ஏற்றிக்கொள்கிறது வண்டி.


வண்டியிலேறிய இரு வயதான பெண்கள் அந்த காலியான சீட்டில் உட்கார……தொடர்ந்து வந்த அந்த இளம் பெண் நிற்க வேண்டியதாகியது.


கண்டக்டருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,  டிரைவருக்கோ பலமான சிரிப்பு..


வயதான அந்த இரு பெண்களிடமும், பேசி சரிகட்டி, ஒருவரை பின்னாலிருந்த தன் நடத்துனர் இருக்கைக்கு அனுப்பிவிட்டு, டிரைவருக்கு எதிரிலிருந்த ஒற்றை சீட்டிலிருந்த பெண்மனியை கெஞ்சி, பின்னிருக்கைக்கு அனுப்பிவிட்டு, 

என்ஜின் மீது அவர் அமர்ந்து, ஒற்றைக் காலியிடத்தில் அந்த பெண்ணை அமரச் சொன்னபோது………


பஸ் திருச்செங்கோடு அடைந்திருந்தது.........

கண்டக்டர் கெஞ்சிய விழிகளுடன்............இல்லடா......இன்னிக்கு நேரமே.....சரியில்லை.....சாரிடா..........


அந்தப்பெண்..:.......இதுக்கொன்னும் கொறச்சலில்லை........தூ......நீயெல்லாம் ஒரு கண்டக்டர்?    என்ற கோபப்பார்வை வீச  

டிரைவர் ...:............இதுக்குத்தான இத்தன அளப்பறையும் என்று ஏளனப்பார்வை வீச




எனக்கு மட்டும் ஏனோ அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.........
.நானும் இப்படித்தான் ..........ஒரு காலத்தில்..........





அவளின் பார்வை வீச்சிற்காய் காத்திருந்திருக்கின்றேன்........
வீச்சின் வேகம் நிறைதலால் 
பலமுறை காயப்பட்டிருக்கிறேன்..........ஆனாலும்...........
 .காத்திருந்திருக்கின்றேன்...........




மனமெங்கும் 
நிறைகின்ற
வலியைத், தின்கிறது-காமம்.
தீர்ந்தபின்

மீண்டும் வலியைத் தேடுகிறது


காதலென்ற பெயரில்...........




அன்புடன்
ஆரூரன்



















Saturday, September 19, 2009

பெரியார்-அண்ணா...நினைவுப் படங்கள்


திராவிடப் பாரம்பரியத்தின் தோற்றிடம்
ஈரோடு தந்தை பெரியார் இல்லம்.


பகுத்தறிவுப் பகலவன் தோன்றிய இடம்


 தந்தை பெரியாரின் அறை



அடையாளச் சின்னம்





பிரியம் சமைத்த கூடு


"எதையும் தாங்கும் இதயத்தின்" பணி தொடங்கிய இடம்

Friday, September 18, 2009

துறவியாகப் போகவிருந்த தந்தை பெரியார்.......

பேரண்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது.  வலியும் அதற்கு காரணமாக இருந்த நோய்க் குறியும்  இப்போது  துளியும் இல்லை.  பசியின்மையும், இளைப்பும், இருக்கிறது.  டாக்டர் மில்லரின் யோசனைப்படி, இத்திங்கள் முழுவதும் இங்கிருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம்,செழியன்,ராஜாராம்,டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்து கொள்கிறார்கள்.  சென்னை மருத்துவமனையிலும்,விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம், இப்பொதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது.  ஆகவே தான் கவலைப்பட வேண்டியதில்லை. முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.  தங்கள் அன்பிற்கு என் நன்றி.  தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில் மனச் சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ, என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன்.  தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது.  புதியதோர் பாதை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  எதிர்பாராத வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக, சீர்திருத்தவாதிக்கும், கிடைத்ததில்லை.  அதுவும் நமது தமிழ்நாட்டில்.  ஆகவே  சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.  என் வணக்கத்தை திருமதி. மணியம்மையார் அவர்களுக்கு தெரிவிக்கவும்.

அன்பு வணக்கங்கள்

தங்களன்புள்ள

அண்ணாதுரை.

நியூயார்க்

10/10/68



 தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய கடிதம்.


பெரியார் ஏனப்படிச் சொன்னார்.?...... தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.


அன்புடன்
ஆரூரன்.


Thursday, September 17, 2009

பார்ப்பணீயத்தின் புதிய தில்லாலங்கடி…..-ஒரு விளக்கம்

நண்பர் வால் பையனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து வெளிவந்த விமர்சனங்களுக்கும், பதிலெழுதாமல் விட மனம் ஒப்பவில்லை. அவர் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு, எப்படிச் சொல்லவந்தார் என்பதில் மூத்த 'தலை'களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு விமர்சித்தது ஏன் என்று தெரியவில்லை. எனவே இப்படி ஒரு பதிவு....  

"பார்பனீயம் என்பது ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். நான் பொதுவாகவே சாதியத்தை எதிர்ப்பதால் இது எந்த வகையிலும் பார்பனர்களுக்கு எதிரான பதிவல்ல என்பது தெரியும், ஒருவேளை இதில் குறிப்பிட்டு பார்பனர்களை சாடுவது போல் இருந்தால் அது சாதி ரீதியாக குறிப்பீடாமல் பார்பனீய ரீதியாக குறிப்பிடுவது மட்டுமே!" 

நல்ல முன்னுரை என்பதை விட நல்ல தற்காப்புரையுடன் நண்பர் வால் எழுதியிருப்பதாக தோன்றுகிறது.

நண்பர் வாலின் இடுகை(http://valpaiyan.blogspot.com/2009/09/blog-post_16.html)
குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த தன்னுடைய நண்பர்கள், அல்லது வேண்டப்பட்டவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு முன்னுரையை எழுதியிருக்கலாம்.


எனது பதிவுகள்:

1. பார்ப்பணீயம் என்பது

"ஒரு சாராரை அடிமைப்படுத்தி அல்லது அறிவு ரீதியாக சிறுமைப்படுத்தி அடக்கி ஆளும் குணம்! அக்குணம் இருப்பவர்கள் பார்பனரல்லாத மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள், அக்குணம் இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்" 

என்பது சரியானதாக இல்லை.

சக மனிதனில் தன்னை முன்னிலைப்படுத்துக்கொள்ள , தன் கல்வியறிவினாலும், அதன்மூலம் பெற்ற அறிவுஜீவித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு படிக்காத பாமரர்களையும், நடுத்தரவர்கத்தையும், சமூகத்தின் பல்வேறு தட்டுகளில் வசித்த மக்களை அடக்கி ஆளும் முகமாக செயல்படும் பார்ப்பனர்களின் சிறப்பு குணாதிசியமே" பார்ப்பணீயம்" என்று கொள்ளலாம்.

"இதில் சேராத பார்ப்பணர்களும் உண்டு" என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

2."பார்பனீயம் வேறு, உயர் ஜாதீயம் வேறு"(டோண்டு அவ்ர்கள் கவனிக்க....)

"உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற தங்கள் வருணாசிரமக் கொள்கையை கொண்டுவந்தவர்களே இந்த பார்ப்பனர்கள் தானே. இவர்களும் தங்களுக்கு நிகராக யாரையும் உருவகப்படுத்தவில்லை. மற்றவர்கள் அனைவரையும் தங்களுக்கு கீழ்ப் பட்டவர்களாகத்தான் உருவகப் படுத்தினார்கள். அளவில் மிகப்பெரிய கூட்டமாக இருந்த மக்களை அடக்கியாள இவர்களுக்கு பணபலமும், புஜ பலமும், தேவைப்பட்டது. அதனால், தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க இவர்கள் சேர்த்துக்கொண்ட இன்னொரு கூட்டம் தான் உயர்ஜாதீயம். இவர்களைக்கூட தங்களுக்கு சமமானவர்களாக, பார்ப்பனர்கள் ஒரு போதும் இவர்கள் ஏற்கவில்லை.

இந்த நாடுமுழுவதும், காசி, அயோத்தி  உட்பட பல இடங்களில் மக்கள் அனைவரும் கோவிலின் கர்ப்பகிரகம் வரை சென்று,  சிலையைத் தொட்டு, பூசிக்கும் முறை இருக்கும் போது, இங்குள்ள உயர்ஜாதியும், நம்மோடு வெளியில் நிற்பதேன். இதைக்கேட்க ஒரு பாஜாகவும், இந்துமுன்னனியும் தயாராயில்லை.  திராவிட தறுதலைகளும் இதை ஏற்றுக்கொண்டு மஞ்சள் துண்டு போர்த்தி வெளியே நம்மோடு நிற்கின்றன.

பார்ப்பனன் உன்னை வெளியே நிறுத்தினான், அதை எதிர்க்க முடியாத நீ, அடுத்தவனை வெளியே நிறுத்தினாய்......




2.பைபிளின் மூல மொழி பற்றிய கருத்து தவறானதானாலும், ஹீப்ரூ மொழிபற்றிய "வாலின்" கருத்து சரியானதே. அழிந்து பட்ட நிலையிலிருக்கும் அதனை இப்பொழுதுதான் மீட்டுவருகின்றனர்.


அதற்கான ஆதார தொகுப்பு:

அ)"கிரேக்க ஆட்சியின் போது, மத அடிப்படைவாத யூதர்களுக்கும், கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றிய மிதவாத யூதர்களுக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. (சிரியாவில் இருந்து வந்த) அசிரிய படைவீரர்கள் துணையுடன் மிதவாத யூதர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை அவ்வப்போது நிலைநாட்டி வந்துள்ளனர். இதன் காரணமாகவும் இயேசுவும், அவரது சீடர்களும் அரேபிய மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் பண்டைய சிரியர்கள், (ஹீப்ரு, அரபு மொழிகளை ஒத்த௦) அரேமிய மொழி பேசி வந்துள்ளனர். இருப்பினும் வேதாகமத்தில் பல சுவிசேஷங்களை எழுதிய இயேசுவின் சீடரான பவுல், அரேமிய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியை பயன்படுத்தினார். இதனால் தான் பைபிளின் மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பாலஸ்தீன யூதரான பவுல், கிரேக்க நகரமொன்றில் பிறந்து வளர்ந்தவர். அத்தோடு ரோம குடியுரிமை பெற்றிருந்தார். இதனால் பவுலின் வருகைக்கு பிறகு கிறிஸ்தவ கருத்துகள் பிற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது"

(http://kalaiy.blogspot.com/2009/04/blog-post_12.html)



ஆ)இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html


சம்ஸ்கிரதத்தை ஒரு மொழி என்று என்னால் ஏற்க முடியவில்லை. வால் பையனின் வார்த்தைகளின் படி

" மொழி என்பது ஒலி வடிவ தகவல் தொடர்பு சாதனம்" என்றால், வீட்டில் சம்ஸ்கிரதத்தில் பேசும், கடிதமெழுதும் பார்ப்பனர்களை நம்மால் காண முடிவதில்லையே.

மொழிக்கான அடிப்படையே இல்லாததால் தான் இவர்கள் அடுத்தபடியில் நிற்கும் ஹிந்திக்கு வால்பிடிக்கின்றனர். மற்றவர்களிடமிருந்து தன்னை உயர்த்திப்பிடிக்க, இவர்களின் அடுத்த இலக்கு, ஏதாவது ஒன்றைச் சொல்லி மக்களை ஒன்றுதிரளச் செய்வதுதான்.

இந்தியன் என்ற "தேசியம்" பேசும் இவர்கள்,  என்றாவது இந்தியன் என்ற பொது இனம் என்று பேசியிருக்கிறார்களா? இந்துக்கள் என்ற பறந்துபட்ட பதத்திலாவது, பேசியிருக்கிறார்களா? இல்லையே.

பிறப்பால்,மொழியால்,கலாச்சாரத்தால், நடைமுறைப் பழக்கவழக்கத்தால், விரிவடைந்திருக்கும் மக்களை ஒன்று திரட்டவும், அவர்களின் இன தனித்துவத்தை இழக்கச்செய்யும் விதமானதாக பயன் படுத்தப்பட்டது தான் இந்த 'ஹிந்தி'ஹிந்து,ஹிந்துத்துவம், கடவுள் போன்ற கதையெல்லாம். 

ஹிந்தி பேசுபவனையெல்லாம் இவர்கள் உயர்ந்தவர்கள், தங்களுக்குச் சமமானவர்கள் என்று இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே.

மக்களை ஒன்று திரட்டுவதும், அதன்பின் அவர்களை தங்களுக்கீழ் கொண்டுவந்து, தங்கள் மேதாவித்தனத்தை வெளிக்காட்ட முனைவதும் இவர்களின் இயல்பே. 

நம்மூரில் கூட சில கதர்ச் சட்டை மேதாவிலாசங்களும், தேசியம் பேசும் அறிவுஜீவிகளும் கூட்டங்களில் பேசி முடித்தவுடன், "ஜெய் ஹிந்த்" என்பதை காண முடிகிறது. இவர்கள் ஹிந்துவை வாழ்த்துகிறார்களா? இந்தியாவை வாழ்த்துகிறார்களா?

ஹிந்தி கற்பதும் கற்காததும் அவரவர் விருப்பம். மொழியை அடிப்படையாக கொண்டு நம்மை ஒன்றினைத்து அடக்கியாள முயலும் இவர்களின் சாகச திட்டங்களும், அதன் தொடர்பாக நம் இனத்தின் தனித்துவங்களை அழிக்கமுயலும் இவர்களின் திட்டமும் தான் நமக்கு பிரச்சனை.





Wednesday, September 16, 2009

நம் குழந்தை இழந்ததினி மீளா


பத்தடிக்கு பத்தடியில்
பட்டுமெத்தை நாமளித்து
பாலும் தேனும் கொடுத்தாலும்-தோழா
நம் குழந்தை,  இழந்ததினி மீளா

கருக்கலிலே முழுச்சதுமே
கம்மாக்கரை தேட  வச்சா அம்மாயி
விளக்கெண்ணை வைத்தியந்தான் அப்போது-இந்த
விவரஞ்சொல்ல ஆ ளேது  இப்போது.

தண்ணிக்குள்ள மூச்சடக்கி
தவளையாட்டம் ஆடிபுட்டு
கஞ்சி குடிச்சு, நடந்ததொரு காலம்-இப்ப
காரு வண்டி, கார்ன் பிளக்ஸ், நாம எங்க போறம்?

சுட்டுத்தின்ன பனம்பழமும்,
சோளச்சோறும்,கம்மங்கூலும்
காட்சிப் பொரு  ளாகத்தானே ஆச்சு-சொம்புத்
தண்ணி வெல கேக்க சாவு விழுந்தாச்சு.

ஊரெங்கும் ஓடியாடி,
காடுமேடு யாவும் சுத்தி
ஊரடங்க நாமுறங்கப் போனோம்-இப்ப
வூட்ட தாண்டி போக யெடங் காணோம்.

ஆத்தா போட்ட சோத்தில
அப்புச்சி சொன்ன கதையில
படுத்ததுமே உறங்கிப்போனோம் திண்ணையில-அடுத்த
தலைமுறையே உருளுதிங்க  தண்ணியில.

சோளக்காடு,ஆலமரம், கேணி
கரும்புக்காடு, கடல காடு, ஏரி
அத்தனையும் ஆக்கிப்புட்டான் ப்ளாட்டா-இப்ப
அடுக்குமாடி திட்டம் வேற,     லேட்டா..


Sunday, September 13, 2009

ஈரோட்டில் பாரதி............

பாரதியின் கடைசிக்கூட்டம் பற்றி ஐயா, கணேசனின் அவர்களின் பதிவைப் படித்ததும், நான் சிறு வயதில் பார்த்த  அந்த படிப்பகம் நினைவிற்கு வந்தது.
இன்று சென்றிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

பள்ளிக்குசெல்லும் போது ஒரு பழைய இடிந்த கட்டிடத்தை பார்த்திருக்கிறேன். பாரதி ஈரோடு வந்த போது இங்கு கூட்டம் நடந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் பள்ளியிலே படித்த காலத்தில் இடிந்து, சிதிலமடைந்திருந்த கட்டிடத்தை, புதுப்பித்து, நல்ல நினைவிடமாக மாற்றிய முன்னாள் மாவட்ட ஆட்சியர். முனைவர். உதயச்சந்திரன். அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.


http://nganesan.blogspot.com/2009/09/bharati-last-speech.html


 
  

பத்திரிக்கைச் சுதந்திரமும், இலங்கை அரசும்

Save Tamils Movement
43/6, Bazaar street, Nesapakkam, KK Nagar west, Chennai 78. Ph: 9840090898
[Type text]
12.09.09

Tissainayagam Case: Brief Facts

S. Tissainayagam, a senior journalist and Sunday Times columnist, was sentenced to twenty-year rigorous
imprisonment by Colombo High Court on 31st August 2009. Mr. Tissainayagam has been indicted under the notorious Prevention of Terrorism Act (PTA), 1979 and Emergency Regulations (ER), and was charged on three counts including printing and distributing the publication North Eastern Herald Monthly magazine.
Journalist Tissainayagam was detained on March 7, 2008 when he went to the Sri Lanka's Terrorist Investigation Division (TID) to look for his colleagues Jasikaran and Valarmathy. He was detained for almost six months without charges.

The evidence against Tissainayagam and Jasiharan amounts to little else than two articles published in the
Northeastern Monthly. The first of these, which ran as an editorial in the July 2006 issue, commented that “the inability to protect its citizens within the areas it controls has caused Sri Lanka international embarrassment”. After a brief consideration of the security dilemmas faced by Tamils in government-controlled areas in the north and east of Sri Lanka, the editorial argued that they could expect no protection from the Government, since “it is the state security forces that are the main perpetrator of the killings”.

The second article, published under Tissainayagam’s initials in November 2006, drew attention to the deteriorating humanitarian situation in the eastern provincial town of Vaharai, which had been targeted by a sustained campaign of artillery and aerial bombardment as Sri Lankan forces sought its recapture from Tamil Tiger rebels.

Tissainayagam commented that the Government was not doing this “without design”. “By trapping the Tamil population inVaharai”, he argued, the Government hoped to create a “human shield” that would prevent any Tamil Tigeroffensives further south. “At the same time, starving and bombing Tamil civilians in Vaharai (would) createdisaffection between them and the LTTE (Liberation Tigers of Tamil Eelam) leading to friction and ill-will.Such internal quarrels (would) act as insulator for the Government in the highly vulnerable East.”

Tissainayagam for his part said in his testimony before the High Court in Colombo that he stands by all that he has written. Aside from what he wrote in 2006, the main evidence against Tissa is the confession that he is purported to have voluntarily signed. But then, Tissa’s defence has got evidence that his confession statement, as recorded by the cops who arrested him, was seriously tampered with. There are 57 alterations made in black ink, where Tissa has signed off on the margins. There is one which is made in blue, where he has not signed. And this is a crucial detail: in place of “I told the LTTE, I do not need your money”, we have the confession stating “I told the LTTE I do need your money”.

The defence has made the case that apart from the discrepancy in the inks used and the absence of Tissa’s initials in the margin, this particular detail is wrong in terms of the written syntax of Tamil (diacritics etc) and was obviously interpolated into the statement by somebody who did not know the language.
The defence is appealing against this sentence shortly.


Mr. Tissainayagam also won Peter Mackler Award for Courageous and Ethical Journalism by RSF and Global Media Forum (GMF) in the month of August 2009.

US President Barak Obama on Tissainayagam during World Press Freedom Day speech in May 09 says
 


“Tissainayagam and journalists like him are guilty of nothing more than a passion for truth and a tenacious belief that afree society depends on an informed citizenry”

Srilankan State’s Oppression of Media


The present government headed by Mahinda Rajapaksa has systematically targeted the media community to
ruthlessly suppress all freedom of expression in the country. The violence unleashed against the media can be
gauged by the fact that in the last two and a half years about 20 journalists have been killed and over 35 journalists driven by fear and threat had to flee the country and live in exile. A matter to be noted is that in the killings of journalists, a distinctive feature is the targeting of Tamil journalists, especially those who exposed the human rights abuses of the government. The best known example of the state of terror and impunity is the killing of well known editor of the Sunday Leader, Lasantha Wickramathunge on January 7th, 2009 by a gang in broad daylight as he was traveling in his car from his residence to his office. The killers have still not been apprehended. 17.

We attach a list of media workers killed, abducted and arrested between 24th January, 2006 and February, 2009 as an illustration of the state of terror prevailing in Sri Lanka.

- Lasantha Wickrematunge, Editor of Sunday Leader daily, also a freelance reporter for TIME was shot dead by unidentified men in January 2009. Lasantha was an outspoken critic of Sri Lankan Government’s conduct on warfare.


In the words of Mr.lasantha in his last article title ‘And Then they came for me” says


“Indeed, murder has become the primary tool whereby the state seeks to control the organs of liberty. Today
it is the journalists, tomorrow it will be the judges. For neither group have the risks ever been higher or the
stakes lower”


Prohibition of Media Reporting & Denial of Free access to International Media: The Sri Lankan government has ensured that no independent media persons are allowed access to the war zones or to the camps. Even UN agencies and other aid workers have been barred from visiting or working in the area. As a result there is no independent verification of events occurring in the war zones. Whenever media people are allowed access it is by way of a guided tour of specified areas under the watch of security forces without free access to meet with people and collect information. Thus all information emanating from the war zones are only the official statements of the Sri Lankan government. The outside world has no means to verify the same. Anyone violating the government’s ban is visited with serious life threatening consequences.


Appeal to the Journalist Community


We “Save Tamils Movement” an independent IT professional’s movement condemns the sentencing of journalist J.S.Tissainayagam and to twenty years rigorous imprisonment under the Prevention of Terrorism Act (PTA) on August 31,2009.

We “Save Tamil Movement” denounced the verdict as a direct violation of Tissainayagam's right to freedom of expression and more broadly as an assault on press freedom in Sri Lanka. The right to freedom of opinion and expression is protected under international law and is also recognized in the Sri Lankan Constitution. Sri Lanka has misused the PTA and the Emergency Regulations (ER) to silence a critical voice and violate Mr Tissainayagam's rights to freedom of opinion and expression.

We “Save Tamils Movement” appeal to the Journalist community in India & South Asia to appeal with the Co-Chairs and pressurize the Sri Lankan Government on the following:


1. Unconditional release of Journalist Tissainayagam and his two colleagues and dropping the
charges framed under PTA.

2. Free access to International Media to the IDP camps located in vavuniya